உலகில் கொரோனாவால் ஒரே நாளில் 5002 பேர் மரணம்.. ஷாக் தரும் இந்தியா!
ஜெனிவா : உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,77,218 பேர் மரணம் அடைந்துள்ளனர். தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
தற்போது உலகில் கொரோனாவால் இறக்கும் ஐந்து பேரில் ஒருவர் இந்தியர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளத. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 921 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேநேரம் உலக அளவில 5002 பேர் நேற்று மரணம் அடைந்துள்ளனர்.
உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் 3,74,50,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 10,77,218 பேர் மரணம் அடைந்தனர். எனினும்
உலகில் கொரோனா தொற்றில் இருந்து 2,80,97,823 பேர் மீண்டனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 82,75,107 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

அமெரிக்காவில் 80 லட்சம் பேர்
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கி உள்ளது. தற்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 7,944,944 ஆக உள்ளது, அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,051,543 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா பாதிப்பு 5,091,840 ஆக உள்ளது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,285,084 ஆக உயர்ந்துள்ளது.

புதிய பாதிப்பு எண்ணிக்கை
உலகிலேயே நேற்று ஒரே நாளில் இந்தியாவில் மிக அதிகபட்சமாக 74,535 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 50315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் புதிதாக 34,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் 12,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா முதலிடம்
கொரோனா தொற்றால் உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 219,281 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 150,236 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3வது நாடாக இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 108,371 பேர் மரணம் அடைந்துள்ளனர். மெக்ஸிகோவில் கொரோனாவால் இதுவரை 83,507 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

921 பேர் மரணம்
உலகில் கடந்த 24 மணி நேரத்தில் 5002 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக இந்தியாவில் 921 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 634 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 544 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 411 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி உலகில் கொரோனாவால் இறக்கும் ஐந்து பேரில் ஒருவர் இந்தியர் ஆவர். உலகில் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications