நமக்கு முன்னாடி ஒருத்தன் வாழ்ந்திருக்கான்.. நம்மை விட அறிவு கம்மிதான்.. ஆனா அவன்தான் நம்மோட "தல"!
வாஷிங்டன்: மனிதர்களின் மூதாதையர்கள் யார் என்ற ஆய்வு அவ்வப்போது புதிய புதிய முடிவுகளையும், ஆச்சரியங்களையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது மனிதர்களின் புதிய மூதாதையர்கள் குறித்த தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
மனிதர்களின் மூதாதையர்களாக கருதப்படும் குரங்கு இனத்திற்கும் முன்பு வசித்துள்ளனர் இந்த மூதாதையர்கள். கிட்டத்தட்ட 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மனித இனம் வசித்துள்ளது. இதை முழுமையான மனித இனமாக கூற முடியாது. அதேசமயம், இந்த உயிரினத்திலிருந்துதான் மனிதர்களின் மூதாதையர்கள் உருவாகியிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
இந்த புதிய உயிரினத்திற்கு சிறிய அளவிலான மூளைதான் இருந்துள்ளது. இந்த உயிரினமானது, அதன் வழித்தோன்றல்களாலேயே அழிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. அதாவது மனிதர்கள்தான் இந்த மூதாதையர் இனத்தை அழித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு
இந்த புதிய உயிரினத்தின் படிமங்கள் (Fossils) தென் ஆப்பிரிக்காவில் கண்டுபரிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு முதல் இங்கு ஆய்வுகள் நடந்து வருகின்றன. லீ பெர்ஜர் என்பவரது குழுதான் இந்த ஆய்வில ஈடுபட்டுள்ளது. இவர்களிடம் முன்பு ஒரு தொடை எலும்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது பலவகையான படிமங்களை இந்தக் குழுவினர் அகன்றெடுத்துள்ளனர்.

உயிரைப் பணயம் வைத்து
இதுகுறித்து பெர்ஜர் கூறுகையில் நாங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளோம். மொத்தம் 60 பேர் ஈடுபட்டுள்ளோம். இதில் பலர் 18 மீட்டர் ஆழத்தில் நின்றபடி சேகரித்துக் கொண்டுள்ளனர். எங்களது ஆய்வில் மொத்தமாக 1500 படிமங்களை எடுத்துள்ளோம். அதன் முடிவுகள் ஆச்சரியப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார் பெர்ஜர்.

ஹோமோ நாலெடி
இந்த ஆய்வின் மூலமாக ஹோமோ நாலெடி (Homo naledi) என்ற இனத்தை கண்டுபிடித்துள்ளதாக பெர்ஜர் கூறுகிறார். இந்த நாலெடிதான் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து அழிந்த மனிதனின் மூதாதையர் ஆகும். ஒரு குகையிலிருந்து இதுதொடர்பான படிமங்களை பெர்ஜர் குழு எடுத்துள்ளது.

சின்ன மூளை.. குள்ள உடம்பு
இந்த படிமங்களை வைத்துப் பார்த்தால், மனித மூதாதையர்களுக்கு சிறிய மூளை இருந்துள்ளது. அறிவுத்திறன் குறைந்து இருந்தது. உருவமும் குள்ளமாக இருந்துள்ளது. இந்த இனமானது 2 லட்சத்து 36 ஆயிரம் ஆண்டுகள் முதல் 3 லட்சத்து 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம்.

மனிதர்களோடு இணைந்து வாழ்ந்துள்ளனர்
இந்த காலகட்டத்தில்தான் தற்போதைய மனிதர்களின் மூதாதையர்களான ஹோமோ ஹேபிலிஸ் (ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நியான்டர்தால்) இனத்தவரும் வாழ்ந்து வந்தனர். வேறு சில மூதாதையர்களும் இருந்தனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications