ஆப்கனில்.. போராடிய மக்கள் மீது தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு.. 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் காயம்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் கொடியை அகற்றி போராட்டம் நடத்தியதால் 3 பேரை தாலிபான்கள் சுட்டுக் கொன்றனர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர்.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில் தாலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது.
உள்ளூர் மக்கள் பலர் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஒரு சிலர் தாலிபான்கள் அடக்குமுறைக்கு பயந்து வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

தீவிர போராட்டம்
சிலர் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். தலிபான் போராளிகள் என்று கருதப்படும் ஆயுததாரிகள் தாலிபான்கள் கொடியை அகற்றியதற்காக ஜலாலாபாத்தில் ஒரு கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஜலாலாபாத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.

தாலிபான் கொடியை அகற்றினர்
தலைநகர் காபூலில் இருந்து 115 கிமீ தொலைவில் உள்ள கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள பஷ்டுனிஸ்தான் சதுக்கத்தில் இந்த மோதல் நடந்தது. முந்தைய ஆப்கானிஸ்தான் அரசின் கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை கொடிக்குப் பதிலாக ஏற்றப்பட்ட தாலிபான் கொடியை உள்ளூர்வாசிகள் அகற்றியதால் தாலிபான்கள் அவர்களை சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிக்கை வெளியிடவில்லை
ஜலாலாபாத்தில் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தலிபான் போராளிகளா என்பது குறித்து தலிபான்கள் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை. காபூலைக் கைப்பற்றியதிலிருந்து தாலிபான்கள் முந்தைய அரசின் கொடிகளை அகற்றி தங்கள் கொடிகளை தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஏற்றி வருகின்றனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிளர்ச்சியாளர்கள் தாலிபன்கள் கொடியை அகற்றுவதால் கோபம் கொண்டு அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, தடியடி தாக்குதல்களை அரங்கேற்றி வருகினறனர்.

பெண்களுக்கு மதிப்பு
பல்வேறு பகுதிகளில் தாலிபான்களுக்கு எதிராக சிறு சிறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆப்கானிஸ்தானில் அமைதியான ஆட்சியை கொடுப்போம்; இஸ்லாமிய சட்டப்படி பெண்களுக்கு மதிப்பு கொடுப்போம் என்று தாலிபான்கள் கூறினாலும் அதனை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகள் நிலை குறித்து பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications