யு.ஏ.இ.: உம் அல் குவைனில் புதிய மருத்துவ நிலையம் திறப்பு விழா
உம் அல் குவைன்: உம் அல் குவைனில் தம்பே கிளினிக் என்ற புதிய மருத்துவ நிலைய திறப்பு விழா 23.07.2015 அன்று நடைபெற்றது. தம்பே குழுமத்தின் நிறுவன தலைவர் தம்பே முகைதீன், கல்ஃப் மருத்துவ பல்கலைக்கழக தலைமை நிர்வாகி பேராசிரியர் கீதா அசோக் ராஜ், இயக்குநர் அக்பர் முகைதீன் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த மருத்துவ நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் விஷன் 2020 திட்டத்தின் கீழ் மேலும் 15 புதிய மருத்துவ நிலையங்கள் திறக்கப்பட இருப்பதாக தம்பே முகைதீன் தெரிவித்தார். இந்த மருத்துவ நிலையங்கள் நவீன மருத்துவ உபகரணங்களுடன் இருக்கும் என இயக்குநர் அக்பர் முகைதீன் தெரிவித்தார்.
தம்பே மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்கள் அனைத்தும் கல்ஃப் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும்.
இந்த மருத்துவ நிலையத்தில் முதல் மூன்று வாரங்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய மருத்துவ சோதனைகளுக்கு சலுகை கட்டணமும் வழங்கப்படும். முக்கிய இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கார்டுகளும் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த மருத்துவ நிலையத்தின் அருகில் தம்பே பார்மஸியும் திறந்து வைக்கப்பட்டது.
இதுபோன்ற மருத்துவ நிலையங்கள் துபாய், ராசல் கைமா மற்றும் சார்ஜா ஆகிய பகுதிகளிலும் விரைவில் திறக்கப்படும். விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.