துபாய் இன்டர்னேஷனல் பிரிண்டிங் விருது பெற்ற தமிழருக்கு ஈமான் அமைப்பு பாராட்டு
துபாய்: துபாய் இன்டர்நேஷனல் பிரிண்டிங் விருது பெற்ற தமிழர் பிரச்சன்னாவை பாராட்டி துபாய் ஈமான் அமைப்பு 16.05.2014 அன்று நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தது.
துபாய் அல் ரியாமி பிரிண்டிங் பிரஸ்ஸின் மேலாளராக இருந்து வருபவர் திருச்சியைச் சேர்ந்த பிரசன்னா. இவர் மேற்கொண்டு வரும் பிரிண்டிங் வேலைகளைப் பாராட்டி துபாய் அரசு துபாய் இன்டர்னேஷனல் பிரிண்டிங் விருதினை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விழாவில் வழங்கி கௌரவித்தது.
இதையடுத்து பிரச்சன்னாவுக்கு துபாய் ஈமான் அமைப்பு நினைவு பரிசு வழங்கி பாராட்டியது. நினைவுப் பரிசினை துபாய் இந்திய கன்சுலேட்டின் துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் கே. குமார், அரேபியா ஹோல்டிங்ஸ் எக்சிகியூட்டிவ் டைரக்டர் சலீம் அன்சாரி, ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஏ முஹம்மது தாஹா, செயலாளர்கள் முதுவை ஹிதாயத், ஹமீது யாசின், சாதிக், ஈஸா, யாக்கூப், அஸ்கான் கபீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.