ராமர் பட்டாபிஷேக ஓவியம், திப்பு சுல்தான் வாள் உட்பட 90 அரியபொருட்கள் லண்டனில் 9ம் தேதி ஏலம்
லண்டன்: ராமரின் பட்டாபிஷேக ஓவியம், திப்பு சுல்தானின் வாள் உட்பட இந்தியாவின் தொன்மையாக பொக்கிஷப் பொருட்கள் லண்டனில் வரும் 9ம் தேதி ஏலம் விடப்பட இருக்கிறது.
தொடர்ந்து பல அரிய தொன்மையான இந்தியப் பொருட்கள் லண்டனில் ஏலம் விடப் பட்டு வருகின்றது. அந்தவகையில், தற்போது ராமரின் பட்டாபிஷேக ஓவியம் உள்ளிட்ட 90 தொன்மையான பொருட்களை ஏலம் விட லண்டன் ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதிக விலைக்கு அப்பொருட்கள் ஏலம் போகும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவற்றின் விவரங்களாவன....

ஆர்ட் ஆப் இம்பீரியல் இந்தியா....
லண்டனில் உள்ள சாத்பை ஏல நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ள இந்த ஏலத்திற்கு, ‘ஆர்ட் ஆப் இம்பீரியல் இந்தியா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பட்டாபிஷேக ஓவியம்...
ராமரின் பட்டாபிஷேகத்தை குறிக்கும் ஓவியத்தை கடவுள்களும், தேவர்களும் பங்கேற்பது போன்ற காட்சிகள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. எனவே, இந்த ஓவியம் சுமார் 1 கோடி ரூபாயில் இருந்து 1.5 கோடி ரூபாய் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர்வாள்....
அதேபோல், மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் போர்வாள் 80 லட்சம் ரூபாயில் இருந்து 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வரையிலும் ஏலம் போகும் என நம்பப் படுகிறது.

வைரங்கள், தங்க கலசம்.....
மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய வைரங்கள், தங்க தாம்பாளம்(டிரே), தங்க கலசம் போன்றவையும் இந்த ஏலத்தில் பங்கெடுக்க உள்ளது. அவை, சுமார் 2 கோடி முதல் 3 கோடி வரையிலும் ஏலம் எடுக்கப் படும் என ஏல நிறுவனர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குத்துவாள்....
17ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க முலாம் பூச்சுடன் மரகதம் மற்றும் செம்பு கற்கள் பொறிக்கப்பட்ட குத்துவாள் 80 லட்சம் ரூபாயில் இருந்து 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வரையிலும் விலை போகலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications