உங்க பசங்க பேஸ்புக்ல இருக்காங்களா.. ரொம்பக் கவனமா இருக்கணும் பாஸ் நீங்க!
ஒட்டாவா: நாளொன்றிற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவிடுவது, குழந்தைகளின் மனநலத்துக்கு கேடு விளைவிக்கும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கிக் கிடப்பது பொதுவாகவே மூளைக்கு கேடு எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கனடாவில் உள்ள ஒட்டாவா பொது சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த ஹியூக் சம்பாசா கன்யிங்கா மற்றும் ரொசாமண்ட் லூயிஸ் என்ற ஆராய்ச்சியாலர்கள் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
அவர்களது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாவது:-

மன நல பாதிப்புகள்
சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ஒரு நாளைக்கு குழந்தைகள் 2 மணி நேரத்துக்கு அதிகமாகச் செலவிட்டால் அவர்களுக்கு பல்வேறு கையான மன நல பாதிப்புகள், ஏன் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவது உள்ளிட்ட பல பாதிப்புகள் உண்டாகும்.

ஒப்பீடு...
குழந்தைகள் இத்தகைய வலை தளங்களில் அவர்கள் செலவிடும் நேரத்தையும், அவர்களின் மன நலத்தையும் ஒப்பீடு செய்து பார்த்த போது இந்த முடிவு கிடைக்கப் பெற்றது.

25 சதவீத குழந்தைகள்...
7 வயது முதல் 12 வயது வரை உள்ள சுமார் 25 சதவீத குழந்தைகள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கும் அதிகமாக சமூக வலை தளங்களில் தங்களின் நேரத்தைச் செலவிடுகிறார்கள். எனினும், சிலருக்கு இதே சமூக வலைதளங் கள் பிரச்சினையாக இருக்கும் போது, வேறு சிலருக்கு தீர்வாகவும் இருக்கின்றன.

புதிய திட்டங்கள்...
குழந்தைகளில் பலர் இந்த சமூகவலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், அதே வலைதளங்களில் அவர்களின் ஆரோக்கியத்தை மையப்படுத்திய திட்டங்களைக் கொண்டு சேர்க்க முயற்சிக்க வேண்டும்.

ஆய்வுக் கட்டுரை...
இந்த ஆய்வுக் கட்டுரை ‘சைபர் சைக்காலஜி, பிஹேவியர் அண்ட் சோஷியல் நெட்வொர்க் கிங்' எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications