அமெரிக்க விமானத் தாக்குதலில் அல் கொய்தாவின் முக்கியத் தலைவர் சனாபி அல் நாசர் பலி
டமாஸ்கஸ்: சிரியாவில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அல்கொய்தாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சனாபி அல் நாசர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகன் அறிவித்துள்ளது.
சிரியாவில் 40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக அதிபர் ஆசாத்தின் குடும்பத்தினரே ஆட்சியில் இருந்து வருகின்றனர். அங்கு அதிபர் ஆசாத்துக்கு எதிராக சிரியா ஆர்மி என்ற கிளர்ச்சிக் குழு அமெரிக்காவின் ஆயுத உதவியுடன் உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இக்குழு அல்லாமல் அல் நூஸ்ரா என்ற அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும் சிரியாவின் பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

துருக்கி எல்லையில் சிரியா குர்துகளும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் அமெரிக்கா ஆயுத உதவி அளித்து வருகிறது. அதே நேரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சனாபி அல் நாசர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
தற்போது கொல்லப்பட்டுள்ள சனாபியின் உண்மையான பெயர் அப்துல் மோசென் அப்துல்லா இப்ராஹிம் அல் சரேக் ஆகும். சிரியாவிற்கு இடம் பெயர்ந்த அல்கொய்தா தலைவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். வடமேற்கு சிரியாவில் கடந்த வியாழனன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஆவார். அல் கொய்தாவின் கொரசான் பிரிவின் முக்கியத் தலைவராக இருந்து வந்தவர். இந்த கொரசாவன் பிரிவினர் சிரியாவில் இருந்து செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது கொல்லப்பட்டுள்ள சனாபி, கொரசான் பிரிவின் முதன்மை பொருளாளராகவும் இருந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் அல்கொய்தா இயக்கத்தின் ஐந்து முக்கியத் தலைவர்களை அமெரிக்கப் படைகள் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications