ஸ்காட்லாந்து போலீஸை அலறவிட்ட 'புலி' பொம்மை
ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன்ஷர் பண்ணையில் புலி ஒன்று சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலையடுத்து ஆயுதமேந்திய போலீசார் அனுப்பபட்ட நிலையில், அது வெறும் பொம்மை புலி என்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு, அபெர்டீன்ஷரை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மாட்டு கொட்டகையில் புலி ஒன்றை பார்த்ததாக பதற்றத்துடன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பல வாகனங்களுடன் ஆயுதமேந்திய போலீசார் ஹேட்டன் அருகிலிருக்கும் அந்த பண்ணைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், வன உயிரின பூங்கா ஒன்றை தொடர்பு கொண்ட போலீசார் அங்கு புலி எதேணும் தப்பியோடியுள்ளதா என்ற விவரத்தையும் கேட்டு விசாரித்துள்ளனர்.
இந்த தவறான எச்சரிக்கை, அதிகாரிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை வழங்கியதாக ஸ்காட்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது வழக்கத்துக்கு மாறான புகார் என்றாலும் பொதுமக்களுக்கு சாத்தியமான அபாயத்தை அறிவிக்கும் எந்தவொரு அழைப்பும் தீவிரமாக எடுத்துகொள்ளப்படும் என்று ஆய்வாளர் ஜார்ஜ் கார்டினர் கூறியுள்ளார்.
மேலும், இதுப்போன்ற சூழ்நிலைகளில் ஆயுதமேந்திய அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்புவதென்பது ஒரு வழக்கமான நடைமுறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான நடவடிக்கைகள் சுமார் 45 நிமிடங்களுக்குள் முடிவுக்கு வந்ததாகவும், நல்ல நோக்கத்துடன் தவறான தகவல் புகாராக கூறப்பட்டது என ஜார்ஜ் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- பட்ஜெட் மசோதாவிற்கு ஒப்புதல் இல்லை: அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 10 ஆயிரம் மில்லியன் லிட்டர் நீரை தானம் தந்து கேப் டவுன் மக்களுக்கு உதவிய விவசாயிகள்
- தமிழ்த் திரையுலகம்: எங்கே செல்லும் இந்தப் பாதை?
- நான் துரத்திய ஒரே ஆண்மகன் 'பேட்மேன்' முருகானந்தம்தான் : ட்விங்கிள் கன்னா
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications