முடிவை நெருங்கும் காலக்கெடு.. புதிய தாக்குதலை தொடங்கிய ஈரான்! இஸ்ரேல் மீது சரமாரி குண்டு வீச்சு
டெல் அவிவ்: போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்கா முன் வைத்த அம்சங்களை ஈரான் ஏற்க வேண்டும் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். இதனை ஏற்க அதிகாலை 5.30 வரை மட்டுமே கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கிறது.
இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் (IDF) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே நிலவி வரும் போர் பதற்றத்தை இந்த நடவடிக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஈரான் தனது நிலப்பரப்பில் இருந்து நேரடியாக இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய அளவிலான தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளான 'அயன் டோம்' மற்றும் 'ஏரோ' ஆகியவை இந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இஸ்ரேல் முழுவதும் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிபர் ட்ரம்ப் கொடுத்த காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், கார்க் தீவு மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போராக வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications