தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக சாய் இங்-வென் பதவியேற்பு
தைபே: தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முற்போக்கு கட்சியின் சாய் இங்-வென் இன்று பதவியேற்றார்.
சீனாவில் நடந்த உள்நாட்டு போரின் காரணமாக கடந்த 1949 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து தைவான் பிரிந்து சென்று புதிய நாடாக உருவெடுத்தது. ஆனால் தைவான் ஒரு சுயாட்சிப் பிரதேசமாக இருந்தாலும்கூட பெரும்பாலான நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்துவருகின்றன.

இந்நிலையில் சீனாவின் அண்டை நாடாக இருந்து வரும் தைவானில் கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், எதிர்க்கட்சியான ஜனநாயக முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த சாய் இங்-வென் (59) அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
ஆளுங்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட எரிக் சு தோல்வியடைந்தார். மேலும், தோல்வியை ஒப்புக்கொண்டு தனது கட்சி தலைமை பொறுப்பிலிருந்து விலகினார். இந்த தேர்தலையும், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய நிகழ்வுகளையும் சீனா உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், தைவானின் முதல் பெண் அதிபராக சாய் இங்-வென் நேற்று பதவியேற்றார்.
அதிபர் மாளிகை வளாகத்தில் உள்ள தேசியக் கொடியின் முன் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தைவான் மக்கள் தங்கள் வாழ்க்கையின் நெறிமுறையாக உள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை காக்க உறுதி பூண்டுள்ளனர் என்று கூறினார்.
சீனாவுடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க தைவான் உதவியாக இருக்கும் என தெரிவித்தார். மேலும், இருநாட்டு மக்களின் நலனுக்காக பழைய வரலாறுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நேர்மறையான பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
நீண்ட காலமாக சீனாவால் அங்கீகரிக்கப்படாமல் உள்ள தைவானை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. ஒரு நாள் தாய்பூமியுடன்இணைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் படைபலத்தை பிரயோகித்து இணைப்போம் என்றும் சீனா மிரட்டல் விடுத்து வருகிறது.
நடைமுறையில் தைவான் தனி நாடாக இருந்தாலும், அதனைத் தங்களது ஒருங்கிணைந்த பகுதியாக இப்போதும் சீனா கருதி வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications