பாகிஸ்தானில் ஒரே நாளில் 12 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பல்வேறு மாகாண சிறைகளில் இன்று ஒரே நாளில் மட்டும் 12 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் ராணுவப் பள்ளிக் கூடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு அங்கு தூக்கு தண்டனை விதிப்பது மீண்டும் அமலுக்கு வந்தது.

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை அமலுக்கு வந்தது முதல், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முல்தான், கராச்சி, பைசாபாத், ராவல்பிண்டி குஜ்ரன்வாலா, ஜங் உள்ளிட்ட பல்வேறு நகர சிறைகளில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.












Click it and Unblock the Notifications