ருவாண்டாலதான் அதிக பீஃப் சாப்பிடுறாங்க.. அவங்களுக்கு பசுமாடு பரிசா?.. என்ன மோடி இது?
பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டு மக்களுக்கு இலவசமாக பசு மாடுகளை அளித்ததை வைத்து அவரை எல்லோரும் டிவிட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
Recommended Video

கிகாளி: பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டு மக்களுக்கு இலவசமாக பசு மாடுகளை அளித்ததை வைத்து அவரை எல்லோரும் டிவிட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள். ருவாண்டாதான் அதிக மாட்டுக்கறி உண்ணும் நாடுகளில் முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி ருவாண்டா நாட்டுக்கு பசு மாடுகளை பரிசளித்து இருக்கிறார். இங்கிருந்து இதற்காக பசு மாடுகளை ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள். எல்லாம் இந்திய இன, இளம் வயது பசுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 200 பசு மாடுகளை அவர் ருவாண்டா நாட்டிற்கு அளித்து இருக்கிறார். ஒரு வீட்டிற்கு ஒரு மாடு என்று 200 வீடுகளுக்கு அவர் இதை அளிக்க உள்ளார்.
|
என்ன விளக்கம்
இரண்டு பசுமாடு கொண்டு போனா கொள்ளை, 200 பசுமாடு கொண்டு போனா காட்டும் மாஸ்டர் ஸ்டோர்க்கா என்று இவர் கலாய்த்துள்ளார்.
|
மாட்டுக்கறி
உலகில் மாட்டுக்கறி உணவு அதிகம் உண்ணும் நாடுகளில் ருவாண்டாவும் ஒன்று. அவர்களுக்கு போய் பசுமாட்டை பரிசளித்து இருக்கிறார் மோடி என்றுள்ளார்.
|
அதிக தட்டுப்பாடு
அந்த நாட்டில் பெரிய அளவில் மாட்டுக்கறி தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்காகத்தான் மோடி பரிசளித்துள்ளார், என்று கூறியுள்ளார்.
|
ஜாக்கிரதை
பசு தீவிரவாதிகளே, ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் பசுக்களை ருவாண்டாவில் சென்று பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications