ஜெர்மனியில் 18 வயது வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலி, 2 பேர் காயம்
பெர்லின்: ஜெர்மனியில் உள்ள பவாரியாவில் காரில் இருந்தபடி பொதுமக்களைப் பார்த்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
ஜெர்மனியில் உள்ள பவாரியா மாநிலத்தில் இருக்கும் அன்ஸ்பாக் நகரில் ஒருவர் தனது காரில் வந்துள்ளார். அவர் திடீர் என்று காரை நிறுத்தி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சாலையில் சென்றவர்களை நோக்கி சுட்டார்.

இதில் மூதாட்டி, சைக்கிளில் சென்ற ஆண் ஆகிய இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இரண்டு பேர் மீது குண்டு பாய்ந்தது. அதன் பிறகு அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தின். பின்னர் போலீசார் அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்தனர்.
மெர்சிடீஸ் காரில் வந்து இந்த தாக்குதலை நடத்தியவர் வெறும் 18 வயதே ஆன வாலிபர் என்று அதிகாரிகள் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் எதற்காக இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications