”பேஸ்புக் உபயோகிக்காதே” கைது செய்தவர் இறந்த வழக்கில் இரு அதிகாரிகளுக்கு 10 ஆண்டு சிறை

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்தியத் தரைக்கடல் நகரமான அலெக்சாண்டிரியாவில் உள்ள இன்டர்நெட் மையத்தில் எகிப்து நாட்டின் காவல்துறையைச் சேர்ந்த இருவர் "கலெட் செட்"என்ற முகப்புத்தக பயனாளி ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அதன்பின்னர் அவர் இறந்துபோன செய்தி வெளிவந்தபோது மக்கள் கொதித்தெழுந்தனர். இந்தக் கொலையை மறைக்க அரசு முயற்சித்தபோது காவலர்களால் சிதைக்கப்பட்டிருந்த அவரது முகத்தின் புகைப்படம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.
இது பேஸ்புக் பயனாளர்கள் குழு ஒன்றை உருவாக்கி அப்போதைய எகிப்து சர்வாதிகாரியாக விளங்கிய ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான கலவரங்களைத் தீவிரப்படுத்தியது.
18 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மக்களால் வெறுக்கப்பட்ட முபாரக்கின் காவல்துறையை விரட்டி அவரது பதவி இறக்கத்திற்கும் வழி வகுத்தது.
அதன்பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய முகமது மோர்சியும் சென்ற ஆண்டு பதவி இறக்கப்பட்டு அந்நாடு அமைதியின்றி கலவரங்களால் கொந்தளித்துக் கிடக்கின்றது. இது முபாரக் காலத்திய சர்வாதிகார ஆட்சியும், காவல்துறையின் பொறுப்பற்ற கொடுமை நடவடிக்கையும் அங்கு மீண்டும் தோன்றுவதற்கான அச்சத்தைப் பல மனித உரிமை ஆர்வலர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி தற்போதைய அரசு மோர்சியின் ஆதரவாளர்களை மட்டுமின்றி அவருக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்திய இளைய தலைவர்களையும் கைது செய்து காவலில் வைத்துள்ளது.
இந்த நிலையில் செட்டின் மரணத்திற்குக் காரணமாக இருந்த மஹ்மூத் சலா மஹ்மூத் மற்றும் ஆவாத் இஸ்மாயில் சுலைமான் என்ற இரு காவலர்கள் மீதும் நடத்தப்பட்ட மறு விசாரணையில் புதிய அரசு அவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு முன்னால் கடந்த 2011ஆம் ஆண்டு இவர்களுக்கு ஏழு வருட சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications