இரு கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஓமிக்ரான் பாதிப்பு .. வங்கதேசத்தில் அதிர்ச்சி
டாக்கா: ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய வங்கதேச கிரிக்கெட் அணியின் இரு வீராங்கனைக்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் இதுவரை 15 லட்சத்து 78 ஆயிரத்து 996பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 28,022 ஆக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நாட்டு மக்களிடையே உச்சகட்ட அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜிம்பாப்வே சென்று திரும்பிய வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்
வங்கதேச மகளிர் தேசிய கிரிக்கெட் அணி ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் பங்கேற்க சென்ற அக்டோபரில் ஜிம்பாப்வே சென்றது. தகுதிச்சுற்றுடன் தாயகம் திரும்பிய நிலையில் வீராங்கனைகள் டிசம்பர் ஆறாம் தேதி கோவிட் 19 சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இரண்டு பேருக்கு பாசிட்டிவ் என முடிவு வந்த நிலையில், மரபணு மாதிரிகள் வரிசைப்படுத்தலுக்காக ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அவற்றில் இரு வீராங்கனைகளும் ஓமிக்ரான் மாறுபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கவலைப்படத் தேவையில்லை - அதிகாரிகள்
21 மற்றும் 30 வயது உடைய இரு வீராங்கனைகளுக்கும் ஓமிக்ரான் மாறுபாடு வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும், முழு கிரிக்கெட் அணியும் தனிமைப்படுத்தலில் உள்ளதால் யாரும் கவலைப்படத் தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தனிமைப்படுத்தலில் வீராங்கனைகள்
இதுகுறித்து வங்கதேச சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது இரண்டு வீராங்கனைகளும் ஜிம்பாப்வேயில் தங்கியிருந்த போது வைரஸ் தொற்றுக்கு ஆளானதாகவும் டிசம்பர் ஒன்றாம் தேதி நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து போது covid-19 சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் தற்போது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

விரைவில் குணமடைவார்கள்
ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள இரு வீராங்கனைகளும் தற்போது நலமுடன் உள்ளனர் எனவும் அடுத்த இரண்டு வாரங்களில் அவர்கள் குணம் அடைவார்கள் என மருத்துவர்கள் எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜாவித் மாலேக் கூறியுள்ளார்
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications