ட்ரம்ப்-கிம் சந்திப்பில் முக்கிய பங்கு வகித்த சிங்கப்பூர் தமிழ் அமைச்சர்கள் பாலகிருஷ்ணன், சண்முகம்!
ட்ரம்ப்-கிம் சந்திப்புக்கான ஏற்பாடுகளில் முக்கிய பங்கு வகித்தனர் சிங்கப்பூர் அமைச்சர்களாக இருக்கும் தமிழர்களான பாலகிருஷ்ணன் மற்றும் சண்முகம்.
Recommended Video
சிங்கப்பூர்: உலக வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்களாக இருக்கும் தமிழர்களான டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சண்முகம் ஆகியோர் மிக முக்கிய பங்கு வகித்தனர்.
அமெரிக்காவும் வடகொரியாவும் கீரியும் பாம்புமாக சீறிக் கொண்டிருக்கும் நாடுகள். இந்த இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தையை நடத்தி முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்த இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் சட்டம், உள்துறை அமைச்சராக இருக்கும் சண்முகம் எனும் இரு தமிழர்கள்தான்.
மருத்துவம் படித்த பின்னர் அரசியலுக்கு வந்தார் டாக்டர் பாலகிருஷ்ணன். ட்ரம்ப்-கிம் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் பாலகிருஷ்ணன், இரு தலைவர்களது சந்திப்பு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். அனைத்தும் நன்மையில் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வடகொரியா அதிபர் கிம் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறார் என நம்புகிறேன் என்றார். மேலும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் ட்ரம்ப், கிம் ஆகியோரை வரவேற்றது, இருவரது சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது உள்ளிட்ட விவரங்களை இருவருமே அப்டேட் செய்தும் வருகின்றனர்.