ரம்மாசன் புயல்: பிலிப்பைன்சில் 94 பேர் மரணம்
மணிலா: பிலிப்பைன்சில் ரம்மாசன் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
வடக்கு பசிபிக் கடலில், கடந்த வாரம் திடீரென தோன்றிய, ரம்மாசன் சூறாவளி புயல், பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 94 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பான்மை உயிரிழப்புகள், புயலினால் ஏற்பட்ட இடிபாடுகள் மற்றும் விழுந்த மரங்களில் சிக்கி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ரம்மாசன் என்றால், இடியின் கடவுள் என பொருள். இந்தப் புயலில் காணாமல் போனவர்கள் அனைவரும் படகுகளில் கடலுக்கு சென்றவர்கள் என பிலிப்பைன்சின் தேசிய பேரிடர் மேலாண்மை கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் மினா மராசிகன் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் துண்டிப்பு
புயல் தாக்கி ஒரு வாரம் கடந்து விட்ட பின்னரும், 4 லட்சம் பேர் மின்சார வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்சார வசதிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மணிலாவில் கனமழை
ரம்மாசூன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குள், மட்மோ என்ற புதிய புயல் காரணமாக மணிலாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சீனாவில் 18 பேர் பலி
இந்த நிலையில், ரம்மாசன் சனிக்கிழமையன்று சீனாவை பயங்கரமாக தாக்கியது. சீனாவின், ஹெய்னான் மாகாணத்தில், மணிக்கு, 100 கி.மீ.,க்கும் அதிக வேகத்தில் வீசிய சூறாவளியில், 55 வீடுகள் பலத்த சேதமடைந்தன. 60 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிந்தன.

18 பேர் பலி
ஞாயிறன்றும் அந்தப் புயல், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கோர தாண்டவம் ஆடியது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 10 பேர் இறந்ததை அடுத்து, ரம்மாசன் சூறாவளியால் இறந்தவர்கள் எண்ணிக்கை, 18 ஆக உயர்ந்துள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications