ரம்மாசன் புயல்: பிலிப்பைன்சில் 94 பேர் மரணம்
மணிலா: பிலிப்பைன்சில் ரம்மாசன் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
வடக்கு பசிபிக் கடலில், கடந்த வாரம் திடீரென தோன்றிய, ரம்மாசன் சூறாவளி புயல், பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 94 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பான்மை உயிரிழப்புகள், புயலினால் ஏற்பட்ட இடிபாடுகள் மற்றும் விழுந்த மரங்களில் சிக்கி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ரம்மாசன் என்றால், இடியின் கடவுள் என பொருள். இந்தப் புயலில் காணாமல் போனவர்கள் அனைவரும் படகுகளில் கடலுக்கு சென்றவர்கள் என பிலிப்பைன்சின் தேசிய பேரிடர் மேலாண்மை கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் மினா மராசிகன் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் துண்டிப்பு
புயல் தாக்கி ஒரு வாரம் கடந்து விட்ட பின்னரும், 4 லட்சம் பேர் மின்சார வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்சார வசதிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மணிலாவில் கனமழை
ரம்மாசூன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குள், மட்மோ என்ற புதிய புயல் காரணமாக மணிலாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சீனாவில் 18 பேர் பலி
இந்த நிலையில், ரம்மாசன் சனிக்கிழமையன்று சீனாவை பயங்கரமாக தாக்கியது. சீனாவின், ஹெய்னான் மாகாணத்தில், மணிக்கு, 100 கி.மீ.,க்கும் அதிக வேகத்தில் வீசிய சூறாவளியில், 55 வீடுகள் பலத்த சேதமடைந்தன. 60 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிந்தன.

18 பேர் பலி
ஞாயிறன்றும் அந்தப் புயல், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கோர தாண்டவம் ஆடியது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 10 பேர் இறந்ததை அடுத்து, ரம்மாசன் சூறாவளியால் இறந்தவர்கள் எண்ணிக்கை, 18 ஆக உயர்ந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications