துப்பாக்கி முனையில் அமெரிக்க கப்பலை சிறைபிடித்த ஈரான்.... போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா!
வாஷிங்டன்: பெர்சிய வளைகுடா பகுதியில் அமெரிக்க சரக்கு கப்பல் ஒன்றை ஈரான் வழி மறித்து சிறை பிடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க கடற்படை தனது போர்க்கப்பலை அங்கு அனுப்பியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மார்ஷல் தீவைச் சேர்ந்த அந்த அமெரிக்கக் கப்பல், தனது கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்ததால் சிறை பிடித்ததாக ஈரான் கூறியுள்ளது.

மாயர்ஸ்க் டைகிரிஸ் என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பலில் 24 பேர் உள்ளனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவர்கள் என்ற ரோந்துப் படையினரால் சிறை பிடிக்கப்பட்டது. படகுகள் மூலம் வந்த ஈரான் படையினர் அந்தக் கப்பலை செவ்வாய்க்கிழமை காலையில் சிறை பிடித்தனர். அமெரிக்கக் கப்பலின் கேப்டன் சரணடைய முதலில் மறுத்துள்ளார். இதையடுத்து அவர்களை எச்சரிப்பதற்காக துப்பாக்கியால் சுட்டனர் ஈரான் படையினர் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், சர்வதேச அங்கீகாரம் உள்ள கடல் மார்க்கத்தில்தான் அமெரிக்க கப்பல் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதை ஈரான் படையினர் துப்பாக்கி முனையில் தங்களது பகுதிக்குள் திருப்பிச் சென்றுள்ளனர். ஈரான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து உதவி அமெரிக்க கப்பலின் கேப்டன் அமெரிக்கக் கடற்படைக்குத் தகவல் அனுப்பினார். இதையடுத்து போர்க்கப்பல் பெர்சிய வளைகுடாவுக்கு விரைந்துள்ளது என்றனர்.
ஈரான், அமெரிக்கா இடையே ஏற்கனவே உறவு சரியில்லை. சமீப நாட்களாகத்தான் அதில் ஓரளவு சுமூக நிலை திரும்புவது போல இருந்து வருகிறது. அணு ஆயுத அழிப்பு உள்ளிட்டவை குறித்து அமெரிக்காவும், ஈரானும் பேச ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் தற்போது அமெரிக்கக் கப்பலை ஈரான் படையினர் மடக்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த அமெரிக்கா விரும்பவில்லை என்று தெரிகிறது.
மார்ஷல் தீவானது, அமெரிக்காவிடமிருந்து 1986ம் ஆண்டே சுதந்திரம் பெற்று விட்டது. இருப்பினும் அமெரிக்காவை சார்ந்தே அந்தத் தீவு தொடர்ந்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பென்டகன் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஸ்டீவ் வாரன் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், சர்வதேச கப்பல்கள் செல்லும் பாதையில்தான் மார்ஷல் தீவு கப்பலும் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதை ஈரானியர்கள் பிடித்துள்ள விதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. மேலும் எச்சரிக்கும் வகையிலும் ஈரானிய படையினர் சுட்டுள்ளனர். இதுவும் தவறானதாகும். இந்த விவகாரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம், விசாரித்து வருகிறோம் என்றார்.
இந்தக் கப்பலை ரிக்மெர்ஸ் ஷிப்மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்தது. அதில் உள்ள ஊழியர்கள் அனைவரும் கிழக்கு ஐரோப்பியர்கள் மற்றும் ஆசியர்கள் என்று கூறப்படுகிறது. துபாய் அருகே உள்ள துறைமுகம் ஒன்றை நோக்கி அது சென்று கொண்டிருந்தது. ஜெட்டாவிலிருந்து அந்தக் கப்பல் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதில் உணவுப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட சாதாரண சரக்குகளே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications