சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி.. அமைச்சரவையில் தனி துறை தொடங்கிய அரபு எமிரேட்ஸ்
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் அமைச்சரவை பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி போன்றவையெல்லாம் புது துறைகளாக உருவாக்கப்பட்டு அவற்றுக்கு தனி அமைச்சர்களை நியமித்துள்ளது அந்த நாட்டு அரசு.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, தனது கட்டமைப்பை இன்று மாற்றியமைத்துள்ளது. இதன்படி, அமைச்சர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு, துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், சகிப்புத்தன்மை என்று ஒரு துறை உருவாக்கப்பட்டு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரபு நாடு பல தேசங்களை சேர்ந்தவர்களும் தொழில் செய்யும் இடம் என்பதால், ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையோடு இருப்பதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற, துறை உருவாக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியோடு மக்களை வாழச் செய்ய தேவையான ததிட்டங்களை உருவாக்கும் பொறுப்பு மகிழ்ச்சி அமைச்சருக்கு தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications