வானத்தில் பிரகாசமான மர்ம பொருள்.. 10 அடி உயரத்தில் இரு உருவங்கள்! ஏலியன்களா? அமெரிக்கர் பகீர் புகார்
வாஷிங்டன்: வானத்தில் இருந்து ஏதோ ஒரு பொருள் விழுவதையும் அங்கு ராட்சத உயரத்தில் இருவர் தெரிந்ததாகவும் காவல் துறையில் அமெரிக்கர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வேற்றுகிரகத்தில் யாராவது வசிப்பார்களா என்ற சந்தேகம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதிலும் ஏலியன்கள் எப்படி இருப்பார்கள், மனிதர்களை போலவே இருப்பார்களா, இல்லை வேறு மாதிரி இருப்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது.

மேலும் திரைப்படங்களில் பார்த்துதான் ஏலியன்கள் இப்படி இருப்பார்களோ என நினைக்க தோன்றுகிறது. இவர்கள் தங்களது பறக்கும் தட்டுகளில் பூமியை அவ்வப்போது வந்து பார்த்து செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் மூன்று மர்ம பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை யாருடையது என தெரியவில்லை. சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த பாகங்களை தேடி சேகரித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்க ராணுவம். இந்த நிலையில் அமெரிக்காவை இந்த மர்மபொருட்கள் மூலம் ஏலியன்கள் உளவு பார்க்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்தது.
அப்படியிருக்கும் நிலையில் மீண்டும் ஏலியன்கள் குறித்த தகவலால் அமெரிக்காவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 30ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நொவாடாவில் ஒரு நபர் இரவு நேரத்தில் வானத்தில் ஒரு பிரகாசமாக நகர்ந்ததாகவும் அவர் காவல் துறையில் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வானத்தில் இருந்து ஏதோ ஒன்று விழுவதைதான் பார்த்ததாகவும் தனது வீட்டின் பின்புறத்தில் 2 உருவங்களின் அசைவு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த உருவங்கள் 8 அடி உயரம் மற்றும் 10 அடி உயரங்களில் இருந்தன எனறும் தெரிவித்துள்ளார்.

அந்த உருவங்களுக்கு பளபளப்பான கண்களும் பெரிய அளவிலான வாய் இருந்ததாகவும் கூறுகிறார். இதுகுறித்து அந்த நபர் கூறுகையில் நான் பார்த்தவர்கள் பெரிய கண்களை கொண்டிருந்தனர். மனிதர்கள் போல் அவர்கள் இல்லை. 8 அடி முதல் 10 அடி உயரம் வரை இருந்தனர். நான் காமெடிக்காக இதை சொல்லவில்லை. நான் சொல்வது சத்தியம் என கூறியுள்ளார்.
பறக்கும் தட்டுகளையும் வேற்றுகிரகவாசிகளையும் நேரில் பார்த்ததாக மக்கள் பலர் குற்றம்சாடடியுள்ளனர். இதற்காக அமெரிக்கா மேலும் பல ஆராய்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளது. அது போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில் வானத்தில் அதிக வெளிச்சமான ஒரு பொருளை தான் பார்த்ததாகவும் அதே பொருளை தனது குடும்பத்தை சேர்ந்த இருவர் பார்த்தாகவும் தெரிவித்தார். அது போல் உருவங்களை பார்த்ததாகவும் அவை 10 அடி உயரத்திலும் மிகப் பெரிய படைப்பாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications