கொள்ளையடித்த வீட்டில் குட்டித் தூக்கம்... போலீசில் சிக்கிய திருடனுக்கு 18 மாத சிறை
லண்டன்: கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் களைப்பில் சிறிது நேரம் படுத்துத் தூங்கியதால் திருடன் ஒருவன் போலீசில் சிக்கிய வேடிக்கையான சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் நடந்துள்ளது.
பிரான்கி பிலானிகன் என்ற 22 வயது திருடன் ஒருவன் இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் போர்ட்சையர் என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் திருடச் சென்றுள்ளான். அங்கிருந்த பொருட்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து மூட்டை கட்டிய பிரான்கி, திருடிய களைப்பில் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள நினைத்துள்ளான்.
அந்த வீட்டின் படுக்கையறையில் கட்டிலில் படுத்த பிரான்கி, தன்னையறியாமல் அயர்ந்து தூங்கி விட்டான். இதற்கிடையே வீட்டிற்குத் திரும்பிய அதன் உரிமையாளர், வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
படுக்கையறையில் திருடன் ஒருவன் உறங்குவதைக் கண்டதும், உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே விரைந்து வந்த போலீசார் தூங்கிய கொள்ளையனை தட்டி எழுப்பி அவனைக் கைது செய்தனர்.
பிரான்கி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவனுக்கு 18 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications