ஈரானில் தூதரகத்தை மீண்டும் திறக்க இங்கிலாந்து திட்டம்
லண்டன்: ஈரானில் இருந்த இங்கிலாந்து தூதரகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இங்கிலாந்து தூதரகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஈரானில் உள்ள அணு உலைகள் தாக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருந்ததால் இங்கிலாந்து தனது தூதரகத்தை மூடியது.
இந்நிலையில் ஈரானின் புதிய அதிபராக அண்மையில் பதவி ஏற்றுக் கொண்ட ஹஸன் ரூஹானி தங்கள் நாட்டுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த முனைப்பாக உள்ளார். மேலும் அணு ஆயுத திட்டம் குறித்தும் ஒப்பந்தம் செய்யவும் தயாராக உள்ளார்.
இதையடுத்து ஈரானில் மீண்டும் தூதரகத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு எடுத்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications