16 வயது மாணவியிடம் காமுக செயலில் ஈடுபட்ட ஆசிரியர்... நடுவில் தாயார் வந்ததால் சிக்கினார்!
லண்டன்: மாணவி வீட்டுக்கு பாடம் சொல்லித் தருவதற்காக வந்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியிடம் தகாத செயலில் ஈடுபட்டார். அந்த சமயம் பார்த்து மாணவியின் தாயார் வந்து விட்டதால் ஆசிரியர் கையும் களவுமாக சிக்கினார்.
சம்பந்தப்பட்ட மாணவிக்கு வயது 16. ஆசிரியருக்கோ 35 வயதாகிறது. தற்போது அந்த ஆசிரியருக்கு கோர்ட், 14 மாத சிறைத் தண்டனை அளித்துள்ளது. மேலும் அவரை 2 வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்யவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதுபோக அவரை சமூக சேவையில் ஈடுபடுமாறும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆசிரியர் சில காலமாகவே அந்த மாணவியை தவறாக பயன்படுத்தி வந்துள்ளார். அடிக்கடி அவரது வீட்டுக்கே போய் உல்லாசமாக இருந்துள்ளார். மாணவியும் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளார்.
சம்பவத்தன்றும் அந்த மாணவி தனியாக இருந்த சமயம் பார்த்து வீட்டுக்கு வந்தார் ஆசிரியர். வழக்கம் போல மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த சமயம் பார்த்து மாணவியின் தாயார் வீடு திரும்பியுள்ளார். கதவைத் திறந்த மகள் அலங்கோலமாக இருப்பதைப் பார்த்த தாயார் என்ன என்று விசாரித்துள்ளார்.
மகள் சரியாக பதிலளிக்கவில்லை. பயத்துடன் காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த தாயார், படுக்கை அறைக்குப் போனார். அங்கு கதவோரமாக ஆண்கள் அணியும் ஷூ இருப்பதைப் பார்த்தார். கதவை மெதுவாக திறந்து பார்த்த அவர்
அங்கு ஆசிரியர் ஒண்டியபடி பதுங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பிறகுதான் நடந்தது குறித்து தாயாருக்குத் தெரிய வந்தது. அவர் அதிர்ந்து போனார். உடனே தனது கணவருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர் போலீஸில் புகார் தரப்பட்டது. ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. மைனர் சிறுமியை மோசடியான வார்த்தைகளால் ஏமாற்றி தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு 14 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரை 2 வருடம் சஸ்பெண்ட் செய்யவும் கோர்ட் உத்தரவிட்டது.
ஆசிரியர் 10 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளியாக கருதப்பட்டு கண்காணிக்கப்படுவார் என்றும் கோர்ட் அறிவித்தது. இதுதவிர 200 மணி நேரம் அவர் சமூக சேவையில் ஈடுபடுமாறும் கோர்ட் பணித்தது.