போராட உரிமை இருக்கு... விவசாயிகளுக்கு ஐநா சப்போர்ட்!
ஜெனிவா: மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது எனவும் அவர்கள் அமைதி வழியில் போராட அனுமதிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஐநா கருத்து தெரிவித்து உள்ளது.
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தற்போது சர்வதேச கவனத்தையும் ஈர்க்க தொடங்கி உள்ளது. அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் எந்த முடிவும் கிடைக்கவில்லை.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
விவசாயிகளுக்கு பல்வேறு தலைவர்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. வெளிநாட்டு தலைவர்கள் வரிசையில் கனடாவும் ஆதரவு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் ஐநா அமைப்பு விவசாயிகள் போராட்டம் குறித்து முதன் முதலாக கருத்து கூறி உள்ளது. இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன என? செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன்ஸ்டீபன் கூறியதாவது:- உலக மக்கள் யாவருக்கும் அமைதியாக போராட்டம் நடத்த உரிமை உள்ளது. எனவே அரசுகள், அதிகாரிகள் மக்களை அமைதியாக போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் எனவும் இது தேவையற்றது எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ள நிலையில் கனடா அதிபர், ஐநா அமைப்பு விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications