தூக்கு தண்டனையை நிறுத்துங்கள்: பாகிஸ்தானுக்கு பான் கி மூன் வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு வரும் தூக்கு தண்டனைகளை தடுத்து நிறுத்துமாறு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை பெஷாவர் ராணுவ பள்ளி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

தூக்கு தண்டனை பெற்று சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரம் காட்டியது.
இந்த நிலையில் தூக்கு தண்டனை வழங்குவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நவாஸ் ஷெரிப்பை தொலைபேசியில் அழைத்தும் பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications