இந்தியாவை சீண்டுகிறதா? பாகிஸ்தானுக்கு எப் 16 போர் விமானங்களை வாரி வழங்கும் அமெரிக்கா
இஸ்லாமாபாத்: இந்தியா மீது பாகிஸ்தான் எப் 16 விமானம் குண்டு வீசி தாக்கிய வடு மறைவதற்குள், ரூ.863 கோடி மதிப்பில் பாகிஸ்தானுக்கு மீண்டும் எப் 16 ரக விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன் வந்துள்ளது.
காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 50 பேரை தீவிரவாதிகள் கொன்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் பாலகோட் பகுதிக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கி தீவிரவாத முகாம்களை அழித்தன. அதை தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் எப்- 16 ரக போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது.

இந்த போர் விமானங்கள் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இதை தீவிரவாதிகளை ஒடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கி இருந்தது. அதை மீறி இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் அமெரிக்கா சென்று அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது எப்-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு ரூ.863 கோடிக்கு அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் விற்பனை செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.
125 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் எப் -16 விமானங்களை அளிப்பதோடு தொழில்நுட்ப பாதுகாப்பு குழு (டிஎஸ்டி)க்காக பாகிஸ்தானுக்கு சாத்தியமான ஒத்துழைப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980 களின் துவக்கத்திலிருந்து அதாவது, ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராகவும், ஜியா பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரியாக இருந்தபோதும் முதல் கொண்டு, பாகிஸ்தான் அமெரிக்காவிலிருந்து எப் -16 போர் விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது.
ஒரு எப் -16 விமானத்திற்கு குறைந்தது 18.8 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும். 31 அடி இறக்கை கொண்ட இந்த விமானம், அதிகபட்சமாக மணிக்கு 1500 மைல் வேகத்தில் பயணிக்கும்.
-
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம் -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications