நடுவில் பாகிஸ்தானை வைத்து.. ஈரானிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியது அமெரிக்கா! அடுத்து என்ன நடக்கும்?
இஸ்லாமாபாத்: ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானில் இரு நாட்டு அதிகாரிகளும் வந்திருக்கும் நிலையில், தற்போது பாகிஸ்தானை முன்னிறுத்தி முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.
பேச்சுவார்த்தை எதிர்பார்த்தபடி ஸ்மூத்தாக போகிறது எனில், ஹார்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் போக்குவரத்து சீராகும். எனவே பேச்சுவார்த்தை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

மாலை 6.45 மணி நிலவரப்படி, அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை நிறைவடைந்திருக்கிறது. இதில், பாகிஸ்தானிடம் ஈரான் வைத்த டிமாண்டுகள் அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.
- லெபனானில் போர் நிறுத்தம்
- ஈரானின் சொத்துக்களை விடுவித்தல்
இது இரண்டும் நடைமுறைப்படுத்தப்படும்பட்சத்தில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஈரான் கூறியிருந்தது. இதனை பாகிஸ்தான் பிரதிநிதிகள் அமெரிக்காவிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
அடுத்து என்ன நடக்கும்?
தற்போது பேச்சுவார்த்தை, நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தானிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது ஒரு பாசிட்டிவ் விஷயம். ஏனெனில், இரு நாடுகளும் ஒரு உடன்படிக்கைக்கு தயாராக இருப்பதால்தான் நிபுணர் குழுவிடம் பேச்சுவார்த்தை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே நிபுணர் குழு, இரு நாடுகளின் டிமாண்டுகளை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதை ஆய்வு செய்யும்.
அமெரிக்கா தரப்பில், ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அப்படியெனில், எத்தனை கப்பல்கள் ஒரு நாளைக்கு செல்ல அனுமதிக்கப்படும்? எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்? என்பது குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்யும்.
அதேபோல, ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட டிமாண்டையும் நிபுணர் குழு ஆய்வு செய்யும். கத்தாரில் ஈரானின் நிதி பல பில்லியன் டாலர் சிக்கியிருக்கிறது. இது எந்த வங்கி வழியாக விடுவிக்கப்படும், என்று நிபுணர் குழு ஆய்வு செய்யும்.
-
போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம் -
மினாப் 168: ரத்தத்தில் மூழ்கிய புத்தகம், ஷூ, ஸ்கூல் பேக்.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் ஈரானின் செயல்! -
ஹர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்த புதிய யுக்தி! வியூகத்தை மாற்றிய ஈரான்! சுப்ரீம் லீடர் கொடுத்த மெசேஜ்! -
பறந்த 26 போன் கால்கள்.. பாகிஸ்தான் வெறும் 'முகமூடி' தான்.. அமெரிக்கா- ஈரான் போரில் சீனா ஆடிய கேம் -
மீண்டும் வெடிக்கும் போர்? ஹார்முஸ் அருகே அமெரிக்காவின் ₹1,600 கோடி ட்ரோன் மாயம்.! உச்சக்கட்ட பதற்றம் -
உச்சக்கட்ட பரபரப்பில் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்க தலைகள் லிஸ்ட் ரெடி.. யாரெல்லாம் வராங்க? -
டிரம்ப் அடங்கவே மாட்டார் போல.. "இதுவரை கண்டிராத தாக்குதல் இருக்கு!" ஈரானுக்கு புதிய எச்சரிக்கை -
டிரம்ப்-ன் அடுத்த டார்கெட்.. மீண்டும் கிரீன்லாந்து.. NATO நாடுகளை மிரட்டும் அமெரிக்கா! -
ஈரான் ஆடிய ஆட்டம்.. சவுதி அரேபியாவின் மோசமான நிலை.. போர் முடிந்த பின் வெளியான உண்மை! -
அமெரிக்கா - ஈரான் மீட்டிங்: மீடியேட்டராக இருக்கும் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்..? பெரிய லிஸ்ட் இருக்கு -
“பிளான் எங்கே..?” ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க நேட்டோ நாடுகளை நச்சரிக்கும் டிரம்ப்! -
மெல்ல குறையும் பதற்றம்.. சவுதியில் திரும்பும் அமைதி! ஈரான் முன்னெடுத்த முக்கிய மூவ்!












Click it and Unblock the Notifications