"போக்கிமோன் கோ" கேம் மோகம்.. 2 வயது குழந்தையை தனியாக தவிக்கவிட்டுச் சென்ற தம்பதி கைது
லாஸ் ஏஞ்சல்ஸ்: போக்கிமோன் கோ விளையாடுவதற்காக 2 வயது குழந்தையை வீட்டில் தனியாக தவிக்கவிட்டுச் சென்ற அமெரிக்க தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
உலகமெங்கும் அனைவராலும் விரும்பி விளையாடப்பட்டுக் கொண்டிருக்கும் போக்கிமேன் கோ வீடியோ கேம்ஸ், ஒரு ஜாலியான விளையாட்டு தான். இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், வெறும் விளையாட்டாக இல்லாமல் பலரை அடிமையாக்கி விடுகின்றது. அனைவருடைய எண்ணத்தையும் போதையாக்கி கற்பனை உலகிற்கு கொண்டு செல்லும் இந்த போக்கிமோன் கோ.

ஏற்கனவே போக்கிமோன் கோ விளையாட்டு பல சாலை விபத்துகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் போக்கிமோன் கோ விளையாடுவதற்காக 2 வயது குழந்தையை தனியாக தவிக்கவிட்டு சென்ற தம்பதியை போலீசார் கைது
செய்துள்ளனர்.
சான் டான் பள்ளத்தாக்கை சேர்ந்த ப்ரெண்ட் டாலே (27), மற்றும் சாண்ராவின் டாலே (25), தங்களது 2-வயது மகனை, வீட்டில் இரவு 10.30 மணிக்கு வெப்பம் மிகுந்த சூழ்நிலையில் 90 நிமிடங்கள் தண்ணீர் இல்லாமல் தனியாக விட்டுவிட்டு, போக்கிமோன் கோ விளையாடுவதற்காக காரில் சென்றுவிட்டனர்.
பெற்றோர் இல்லாத நிலையில் குழந்தை தொடர்ந்து அழுதபடி வீட்டை விட்டு வெளியே வர முயற்சித்துள்ளது. இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டுள்ளனர்.
பின்னர், போக்கிமோன் கோ விளையாடுவதற்காக குழந்தையை தனியாக விட்டு சென்ற தம்பதிகளை போலீசார் கைது செய்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications