For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தானில் அமெரிக்க தூதரக ஊழியர் சுட்டுக் கொலை- அதிர்ச்சியில் தூதரக அதிகாரிகள்!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஊழியராக பணியாற்றியவர் இக்பால் பையிக். இந்நிலையில் இக்பாலின் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

US embassy employee killed in Pakistan

இதுகுறித்து தகவலறிந்த பாகிஸ்தான் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தூதரக அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
A Pakistani employee of the US embassy here was on Sunday shot and killed by unknown gunmen, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X