சிரியா, ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சரமாரியாக குண்டுவீச்சு!!

Subscribe to Oneindia Tamil

மொசூல்: சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின் கூட்டுப்படை அதிரடி வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாட்டை பிரகடனம் செய்துள்ளனர்.

US-led coalition launches 15 air strikes in Syria and Iraq against Isis

இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி முதல் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த தெக்ரித் நகரை, அமெரிக்காவின் உதவியுடன் ஈராக் ராணுவம் கைப்பற்றி உள்ளது.

தொடர்ந்து அங்கு இருதரப்பு இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும், அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின்படை 15 வான்வழி தாக்குதலை ஈராக் மற்றும் சிரியாவில் நடத்தி உள்ளது.

ஈராக்கில் மொசூல், பாஜீ நகரங்களை சுற்றிலும், தீவிரவாதிகளின் நிலையை குறிவைத்து 9 தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதேபோல் சிரியாவிலும் 6 இடங்களில் தாக்குல் நடத்தப்பட்டு உள்ளது. கோபானி நகரை சுற்றில் 5 இடங்களிலும், ஹாசாகாக் பகுதியில் ஒரு இடத்திலும் குண்டு வீசப்பட்டது என்று அமெரிக்க ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+