ஈரான் மீது தரை வழி போர்.. அமெரிக்கா எடுத்த முக்கிய மூவ்! அம்பலப்படுத்திய சீனா!
பெய்ஜிங்: ஈரான் மீது ஏற்கெனவே அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் தரைவழி போருக்கும் அமெரிக்கா ரெடியாகி வருகிறது. இதற்காக மிக முக்கியமான போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா, ஈரான் நோக்கி திருப்பியிருக்கிறது.
அமெரிக்காவின் சக்தி வாய்ந்த போர் கப்பல்கள், ஈரான் நோக்கி திருப்பப்படுவதை செயற்கைக்கோள் மூலம் சீனா தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்து வருகிறது. தற்போது 'USS திரிப்போலி' கப்பல் ஒன்று வளைகுடா பகுதியை நோக்கி பயணித்து வருவதை சீன செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்திருக்கின்றன.

போர் கப்பல்கள்
இந்த கப்பல் சாதாரண கப்பல் கிடையாது. இருப்பதிலேயே அதிநவீன போர் கப்பல். மற்ற போர் கப்பல்களை போல, கடலில் மட்டும் சண்டை செய்யாது. மாறாக தரைவழி தாக்குதல் நடத்த இது பயன்படுத்தப்படுகிறது. இதன் பின்பகுதி கடலுடன் இணைக்கப்பட்டிருக்கும். அப்படியெனில், கரைக்கு நெருக்கமாக வந்து, பீரங்கி உள்ளிட்ட வாகனங்களையும், வீரர்களையும் நிலப்பரப்புக்குள் அனுப்பும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஹெலிகாப்டர்களும், போர் விமானங்களும் இருக்கின்றன.
மும்முனை தாக்குதல்
இவற்றின் மூலம் தரை, கடல் மற்றும் வான் என மூன்று வழிகளிலும் இந்த கப்பல் தாக்குதலை நடத்தும். இந்த கப்பல் ஒரு பகுதிக்கு வருகிறது எனில், அந்த பகுதியில் நிச்சயம் தரைவழி தாக்குதல் நடத்தப்படும் என்று அர்த்தம். கப்பலில் சுமார் 1000-2000 வீரர்கள் வரை தங்கியிருப்பார்கள். ஒரு மினி ராணுவ முகாமையே இந்த கப்பல் தனக்குள் வைத்திருக்கிறது.
சிறப்பு படை
இதில் உள்ள ராணுவ வீரர்கள் தனி சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். அதிரடியான தாக்குதலுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் வழக்கமாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்தான் இருப்பார்கள். தற்போது இவர்கள் வளைகுடா பகுதிக்கு மாற்றப்பட்டிருப்பது, அங்கு மிகப்பெரிய அளவில் தரைவழி தாக்குதல் நடத்தப்படுகிறது என்று அர்த்தம். 'USS திரிப்போலி' கப்பல், வளைகுடா நோக்கி நகர்ந்து வருவதை சீனாவின் தனியார் செயற்கைக்கோள்கள் உறுதி செய்திருக்கின்றன.
போரின் போக்கு
ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் 3வது வாரத்தை எட்டியிருக்கிறது. இதுவரை நடத்தப்பட்ட அட்டாக்கில், ஈரான் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டிருக்கிறார். எனவே, இந்த போரை ஈரான் லேசில் விடுவதாக இல்லை. பதில் தாக்குதலில் அமெரிக்க படைகளை மொத்தமாக காலி செய்ய முடியவில்லை என்றாலும், கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. பல லட்சம் கோடிகளை போருக்காக செலவிட்டிருக்கிறது. மறுபுறம் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் விலையும் அதிகரித்திருக்கிறது.
இப்படி இருக்கையில், அமெரிக்கா முடிந்த அளவுக்கு சீக்கிரமாக இந்த போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. எனவேதான் தரைவழி தாக்குதலுக்கு ரெடியாகியிருக்கிறது. ஏற்கெனவே ஈரான் கடல் பகுதியில் யுஎஸ்எஸ் ஜெரால்டு போர்டு மற்றும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
முக்கிய கட்டத்தை எட்டிய பேச்சுவார்த்தை.. பாகிஸ்தானிலிருந்து வந்த குட் நியூஸ்! இந்தியாவுக்கு நிம்மதி! -
அடங்க மறுக்கும் ஈரான்.. விடாமல் விரட்டும் ட்ரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடிக்கும் போர்? -
மூடு மாறிய டிரம்ப்! 'ரீசெட்' பண்ணிடுவோம் பாத்துக்கோங்க.. ஈரான் விஷயத்தில் வாயை விட்டுட்டாரே! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே -
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. மீண்டும் 120 டாலரா? -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன? -
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை ரத்தகளறி! தங்கம் - பங்குகள் வீழ்ச்சி, எண்ணெய் உயர்வு? -
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
ஈரான் விவகாரத்தில் உள்ளே வரும் ரஷ்யா? பெசஸ்கியானுக்கு போனை போட்ட புதின்! பேசியது என்ன? -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி -
1.4 கோடி வரை சம்பளம்.. வீடியோ கேம் விளையாட தெரிந்தால்.. அமெரிக்காவில் லட்டு மாதிரி வேலை












Click it and Unblock the Notifications