ஹிரோஷிமாவில் ஒபாமா.. அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலில் பலியானோருக்கு மரியாதை
டோக்கியோ: 2-ம் உலகப்போரின் போது அமெரிக்காவால் அணு குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா வரலாற்று சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டு அங்குள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6.ம் தேதி வரலாற்றில் மறக்க முடியாத நாளாகும். அந்நாளில் நடைபெற்றுக் கொண்டிருந்த 2-வது உலகப்போரின்போது, அமெரிக்கா ‘லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மீது போட்டது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில மூன்று நாட்களில் மேலும் ஒரு அணு குண்டை ஜப்பானின் நாகசாகி நகரிலும் அமெரிக்கா போட்டது. இதில் 75 ஆயிரம் போர் கொல்லப்பட்டனர்.

இந்த இரண்டு அணுகுண்டு வீச்சுகளும் வரலாற்றில் மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, எந்தளவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தன.
இந்த மாபெரும் தாக்குதல் நடத்தியதின் விளைவாக, அமெரிக்காவின் அதிபர்கள் யாரும் அந்த நகருக்கு தமது பதவிக்காலத்தில் சென்றதே இல்லையாம். ஜிம்மி கார்ட்டரும் பதவிக்காலம் முடிந்த பின்னர்தான் ஹிரோஷிமாவுக்கு சென்றார்.

இந்த நிலையில் ஜப்பானில் உள்ள ஷிமா நகரில் ‘ஜி-7' அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டுக்கு சென்றிருந்தார். அவர் ஹிரோஷிமாவில் தாக்குதல் நடந்த இடத்திற்கும் சென்றிருந்தார். இந்த பயணத்தின் மூலமாக ஹிரோஷிமாவுக்கு தனது பதவிக்காலத்தில் சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற சிறப்பை ஒபாமா பெற்றிருக்கிறார்.
ஹிரோஷிமாவில் அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அங்கு அணையா விளக்குடன் கூடிய நினைவு சின்னம் உள்ளது. அங்கு சென்ற ஒபாமா நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய ஒபாமா, வேதனை நிறைந்த பிளவைக்கூட உறவுவின் மூலம் இணைக்கமுடியும் என்பதற்கு இந்த பயணம் சான்று. இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு இது ஒரு வாய்ப்பு. உலகில் இனி அணு ஆயுதங்கள் தேவை இல்லை என்ற நிலையில், உலக அமைதியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த பயணம் அமைந்துள்ளது. மேலும் உலகின் பலம் வாய்ந்த உறவுகளில் ஒன்றாக அமெரிக்கா-ஜப்பான் உறவு அமைந்துள்ளது என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications