தேவ்யானியை கைது செய்ய வாரண்ட்: அமெரிக்க உத்தரவு
நியூயார்க்: இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகடே மீதான, விசா முறைகேடு குற்றச்சாட்டை நியூயார்க் நீதிமன்றம், ரத்து செய்த நிலையில் அமெரிக்க அரசு அவர் மீது கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள, இந்திய தூதரகத்தில், துணை தூதராக, தேவ்யானி கோப்ரகாடே, 39, என்ற, பெண் ஐ.எப்.எஸ்., அதிகாரி பணியாற்றினார்.

இவரது வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு, 'விசா' பெறுவதற்காக, மோசடியான, சில சான்றிதழ்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில், தேவ்யானியை, அமெரிக்க போலீஸ், கடந்த டிசம்பரில், கைது செய்தது. கைவிலங்கிடப்பட்ட நிலையில், சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட தேவ்யானியின், உடைகளை களைந்து, போலீசார் சோதனை செய்தனர். அவரை, பயங்கர குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறையில் அடைத்து விசாரணை நடத்தினர்.1.5 கோடி ரூபாய் செலுத்திய பின், ஜாமினில், தேவ்யானி விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் தேவயானி ஐ.நா., வுக்கு மாற்றப்பட்டார்.
தேவ்யானி மீதான, விசா முறைகேடு குற்றச்சாட்டை நியூயார்க் நீதிமன்றம்,நேற்று ரத்து செய்தது. இந்நிலையில் தேவ்யானி மீது விசா மோசடி வழக்கு மீண்டும் தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய வம்சாவளியை சேர்ந்த, அமெரிக்க அரசு வழக்கறிஞர், ப்ரீத் பாரா, தேவயானி மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர்தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், தேவ்யானி, தமது வீட்டுப் பணியாளான சங்கீதா ரிச்சர்டுக்கு குறைவான ஊதியம் கொடுத்து, உழைப்பைச் சுரண்டியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பணியாள் குறித்து பொய்யான தகவல்களைத் தந்து விசா பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க அரசு அவர் மீது அரஸ்ட் வாரண்ட்-ஐ பிறப்பித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications