சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை நிறுத்த அமெரிக்கா, ரஷ்யா முடிவு
வாஷிங்டன்: சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை நிறுத்த அமெரிக்காவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாதுக்கு எதிராக சில அமைப்பினர் போராடி வருகின்றனர். இது தவிர ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வேறு அட்டகாசம் செய்து வருகிறார்கள். உள்நாட்டு போரால் சிரியா மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டில் இருந்து இதுவரை சிரியாவில் நடந்த வன்முறை சம்பவங்களில் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதிபர் ஆசாத் கேட்டுக் கொண்டதன் பேரில் ரஷ்யா தனது ராணுவத்தை சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்த அமெரிக்காவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் புதினும் திங்கட்கிழமை தொலைபேசியில் கலந்தாலோசித்துள்ளனர்.
போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது தான் கடினம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், அல் கொய்தாவின் கிளையான அல் நுஸ்ரா அமைப்பினருக்கு எதிரான தாக்குதல் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா உள்நாட்டு போரை நிறுத்தும் முடிவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வரவேற்றுள்ளார்.
-
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications