ஆச்சரியம்! வடகொரியாவுக்குள் அத்துமீறிய அமெரிக்க ராணுவ வீரர்! ஓராண்டு கழித்து பத்திரமாக விடுவிப்பு
பியாங்யாங்: பல சர்வாதிகார நடவடிக்கைகளுக்காக பெயர் பெற்றதாக சொல்லப்படும் வடகொரியாவில், கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் நுழைந்துவிட்டார். இந்நிலையில் ஓராண்டு கழித்து அவரை வடகொரியா விடுவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவுக்கு வடகொரியா ஒரு தகவலை அனுப்பியது. வழக்கமாக இந்த நாடுகளுக்கு இடையில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறுவது கிடையாது. இப்படி இருக்கையில், வடகொரியாவின் மெசேஜ் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இரண்டு வரி கொண்ட அந்த தகவலில், "உங்கள் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சர்வாதிகார, ஈவு இரக்கமற்ற நடவடிக்கைக்கு பெயர் பெற்றதாக மேற்கு ஊடகங்களால் சித்தரிக்கப்படும், கிம் ஜாங் உன் ஆட்சிப்பகுதியில் அமெரிக்க வீரர் நுழைந்துவிட்டார் என்பது அன்றைய தேதிகளில் தலைப்பு செய்தியானது.
எதிரி நாட்டின் குடிமகன் அத்துமீறி எல்லையில் நுழைந்துவிட்டாலே ஏராளமான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இப்படி இருக்கையில் ராணுவ வீரர் நுழைந்துவிட்டால்? இது போன்ற சம்பவங்களின்போது அத்துமீறியவர்களை விசாரிக்க சில வழிமுறைகள் பின்பற்றப்படும்.
முதலில் அத்துமீறியவரின் அடையாளம், உள்ளே நுழைந்ததற்கான நோக்கம், ராணுவத்தில் எந்த யூனிட்டில் பணியாற்றுகிறார்? என்பது போன்ற அடிப்படை கேள்விகள் கேட்கப்படும். பின்னர் அவர் ஏதேனும் ஆபத்தான ஆயுதங்களை கொண்டுவந்தாரா? என்பதும் விசாரிக்கப்படும். இதன் பின்னர்தான் விரிவான விசாரணை தொடங்கும்.
இராணுவ உத்திகள் மற்றும் செயல்பாடுகள், படைகளின் நடமாட்டம் பற்றிய தகவல்கள், உளவுத்துறை செயல்பாடுகள், கைதானவர் நாட்டின் திட்டங்கள் அல்லது நோக்கங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படும். இறுதியாக சில உளவியல் சோதனைகளும் நடைபெறும். அதன் பின்னர் கைது செய்யப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, இரு நாட்டுக்கு இடையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
வடகொரியா அரசும் மேற்குறிப்பிட்ட நடைமுறையையே பின்பற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ராணுவத்தின் பிரைவேட் செகண்ட் க்ளாஸ் படைப்பிரிவைச் சேர்ந்த டிராவிஸ் கிங் என்பவர் வடகொரியா எல்லையை தாண்டியிருந்தார். மேற்குறிப்பிட்ட நடைமுறையின் கீழ் டிராவிஸ் கிங்கை ஓராண்டு கைது செய்து வைத்திருந்த வடகொரியா தற்போது அவரை விடுவித்திருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, "வடகொரியா முடிந்தவரை எங்கள் ராணுவ வீரரிடமிருந்து அனைத்து தகவல்களையும் கறந்திருக்கும்" என்று கூறியுள்ளது.
சர்வாதிகார நாடாக வடகொரியா சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில், வடகொரியாவிலிருந்து அமெரிக்க ராணுவ வீரர் பத்திரமாக விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவனம் பெற்ற சம்பவமாக மாறியுள்ளது.
-
வல்லரசின் அஸ்தமனம்! அமெரிக்காவின் 20 ஆண்டு உழைப்பை நொறுக்கிய ஈரான்! ஈராக்கில் இருந்து US வெளியேறியது -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
ஈரானிடம் தோல்வி அடைந்த அமெரிக்கா? ஹார்முஸில் இருந்து 'டாடா' காட்டும் ட்ரம்ப்.. எல்லாம் முடிந்தது? -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications