தமிழக விவசாயிகளுக்காக வாஷிங்டனில் தமிழர்கள் போராட்டம்… சியாட்டலிலும் நடக்கிறது!
தமிழகத்திலும் டெல்லியிலும் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கத் தமிழர்களும் போராட்டக் களத்தில் இறங்கி உள்ளனர்.
இன்று சனிக்கிழமை, ஏப்ரல் 8ம் தேதி காலை 11 மணி அளவில் வாஷிங்டன் டிசி யில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக தமிழர்கள் திரண்டு போராட்டம் நடத்த உள்ளார்கள்.

உள்ளூர் காவல்துறை மற்றும் பூங்கா பராமரிப்புத் துறையின் அனுமதியுடன் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
காவிரி டெல்டா பகுதியை 'பாதுகாக்கப்பட்ட விவசாயப் பகுதி'யாக அறிவிப்பு,, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு, நதிகளை தேசியமயமாக்குதல்,
மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிடுதல் என முக்கிய பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுவில் மக்களிடம் கையெழுத்து வாங்கி இந்திய தூதரகம் வழியாக பிரதமருக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளார்கள்.
சிவா வெங்கட், ராஜாராமன், சுரேஷ், சதீஷ், ராமகிருஷ்ணன், அரங்க்ஸ் ஆகியோர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
வாஷிங்டன் வட்டாரப்பகுதியில் உள்ள வர்ஜீனியா, மேரிலாண்ட், டெலவர் ஆகிய மாநிலங்களிலிருந்து பெருவாரியாக தமிழர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்கள்.

கிழக்கே அட்லாண்டிக் கடல் அருகே வாஷிங்டன் நகரில் போராட்டம் நடைபெறும் அதே நாளில், மேற்கே பசிபிக் கடல் அருகே வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டல் நகரிலும் தமிழர்கள் விவசாயிகளுக்காக போராடுகிறார்கள்.
சியாட்டல் தமிழ்ச் சங்கம் சார்பில்...
சியாட்டல் தமிழ்ச் சங்கம் சார்பில் பெல்வியூ நூலகத்தில் காந்தி சிலைக்கு அருகே சனிக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறுகிறது.

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு, மக்கள் விருப்பத்திற்கு எதிராக தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு,
உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி காவேரி நீர் மேலாண்மை மையம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைதி வழி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக டல்லாஸிலும், அட்லாண்டாவிலும் உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத் தக்கதாகும்.
-இர தினகர்
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications