நைஸாக சீனாவுக்குள் அத்துமீறி நுழைந்த.. 2 அமெரிக்க விமானங்கள்.. பீஜிங்கில் பதட்டம்!
பீஜிங்: சீனாவில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்த பகுதியில் அமெரிக்காவின் இரண்டு உளவு விமானங்கள் அத்துமீறி பறந்ததாக அந்த நாடு குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வு குயின் விடுத்திருக்கும் அறிக்கையில், ''பீஜிங்கில் ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, அமெரிக்க உளவு விமானங்கள் ஊடுருவின. இது ராணுவத்தினரின் பயிற்சி மற்றும் அன்றாட செயல்களை மிகவும் பாதித்துள்ளது. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான கடல் பாதுகாப்பு சட்ட புரிந்துணர்வை அமெரிக்கா அத்துமீறி இருக்கிறது. சர்வதேச சட்டத்தையும் உடன்பாட்டையும் மீறி இருக்கிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தவறான வழிகாட்டுதல் மற்றும் விபத்துக்களுக்கு காரணமாக அமையலாம். செவ்வாய் கிழமை இரண்டு பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது இந்த சம்பவம் நடந்தது'' என்று தெரிவித்துள்ளது.
ஆனால், சீனாவின் புகாரை அமெரிக்காவின் பசிபிக் ராணுவப் படை மறுத்துள்ளது. அமெரிக்காவின் பசிபிக் ராணுவப் படை அளித்திருந்த விளக்கத்தில், ''யு 2 விமானம் பறந்தது உண்மைதான். ஆனால், அதுமீறலில் ஈடுபடவில்லை. சர்வதேச சட்டத்தின்படி ஒப்புக் கொள்ளப்பட்ட இந்தோ-பசிபிக் பகுதியில்தான் விமானம் பறந்தது. சர்வதேச சட்டம் அனுமதிக்கும் எந்தப் பகுதியிலும் பறப்பதற்கு அனுமதி தேவையில்லை'' என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பசிபிக் கமாண்டரும் சீனாவின் புகாரை மறுத்துள்ளார். அமெரிக்க உளவு விமானங்கள் மிகவும் அதிநவீனம் வாய்ந்தவை. சீனாவின் எல்லைக்குள் சென்று மோப்பம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
யு 2 ரக உளவு விமானங்கள் மிகவும் பழமையானது. 1950ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனுடன் ஏற்பட்டு இருந்த பனிப்போரின்போது அந்த நாட்டின் ராணுவத்தை உளவு பார்க்க அமெரிக்க பயன்படுத்தி இருந்தது. மிகவும் தொலைவில் இருந்து கண்காணிக்கும் திறன் வாய்ந்தது இந்த உளவு விமானம். பசிபிக் பகுதியில் அமெரிக்கா தனது சொந்த ராணுவ பலத்தை பயன்படுத்தி வருகிறது.
சீனா சமீபத்தில் கடலுக்குள் ராணுவப் பயிற்சிகளை அதிகரித்து வருகிறது. பசிபிக் கடல் பகுதியில் பயிற்சி மேற்கொண்டு இருந்த நிலையில் யெல்லோ சீ எனப்படும் மஞ்சள் கடலிலும் பயிற்சியை முடித்துள்ளது.












Click it and Unblock the Notifications