மோடி பிரதமரானால் அவருடன் இணைந்து அமெரிக்கா செயலாற்றும்: காண்டலீசா ரைஸ்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மோடி பிரதமரானால் அமெரிக்கா அவருடன் இணைந்து செயல்படும் என்று அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த காண்டலீசா ரைஸ் கூறியதாவது:

குஜராத் கலவரம் குறித்த நிலை தற்போது மாறிவிட்டது. அது குறித்த யோசனை இனி மேலும் தேவையில்லை, மோடி பிரதமரானால் அமெரிக்கா அவருடன் இணைந்து செயல்படும்.

condoleezza rice and narendra modi

தாங்கள் நடந்து என்ன என்று பார்ப்பதை தவிர்த்து, நடக்க போவது என்ன என்று பார்க்க விரும்புவதாகவும் எதிர்கால வளர்ச்சிக்கு பலமாக அடித்தளத்தை உருவாக்க விரும்புவதாகவும் அதை நோக்கி நிலையான குறிக்கோளுடன் மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தள்ளார்.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, யார் இந்திய பிரதமராக வந்தாலும் அமெரிக்க அவருடன் இணைந்து செயல்படும், மக்களின் அடிப்படை நலன்களையும், மதிப்பையும் உயர்த்தும் வகையில் இந்திய பிரமரும் அமெரிக்க அதிபரும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், கடந்த பல ஆண்டுகளாக அதிபர் ஒபாமா அவ்வாறே செயல்பட்டு வந்துள்ளபோது, இந்தியாவில் யார் பிரதமராக வந்தாலும் இந்நடவடிக்கை தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+