பார்த்து பார்த்து தேர்வு செய்து மன்மோகனுக்கு புதின் அளித்த 3 பரிசுகள்
மாஸ்கோ: ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அந்நாட்டு அதிபர் 3 பரிசுகளை அளித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சிங்கிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 3 ஸ்பெஷல் பரிசுகளை அளித்துள்ளார்.

ரஷ்ய ஜார் இரண்டாம் நிக்கோலஸின் ஓவியம், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய வரைபடம் மற்றும் முகலாயர் காலத்து நாணயம் ஆகியவற்றை புதின் சிங்கிற்கு பரிசாக அளித்துள்ளார்.
புதின் இந்த பரிசுகளை தானாகத் தேர்வு செய்து அளித்துள்ளார் என்று இந்திய தூதர் அஜய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இரண்டாம் நிக்கோலஸ் 1894ம் ஆண்டு முதல் 1917ம் ஆண்டு வரை ரஷ்யாவின் ஜாராக இருந்தார். முன்னதாக கடந்த 1890ம் ஆண்டு முதல் 1891ம் ஆண்டு வரை அவர் இந்தியாவில் பயணம் செய்து பல்வேறு நகரங்களுக்கு சென்றுள்ளார். அந்த பயணத்தின்போது இளவரசரான நிக்கோலஸ் இந்திய மகாராஜாக்களை சந்தித்து பேசியுள்ளார்.
தற்போது சிங்கிற்கு அளிக்கப்பட்டுள்ள ஓவியத்தில் நிக்கோலஸ் இந்திய மகாராஜா ஒருவருடன் இருப்பது போன்று வரையப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் மன்மோகன் சிங்கிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications