மருந்து, மளிகை சாமான்கள், பால் பவுடர் வாங்க கொலம்பியாவுக்கு "படையெடுத்த" வெனிசூலா மக்கள்!
கொலம்பியா: வெனிசூலா நாட்டவர் ஆயிரக்கணக்கில் கொலம்பியா நாட்டுக்குள் உணவுப் பொருட்களை வாங்கக் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் வெனிசூலா நாட்டவர் உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு தங்களது நாட்டுக்குத் திரும்பினர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைப்பதில்லை. அந்த அளவுக்கு அங்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதையடுத்து கொலம்பியா நாட்டுடன் பேசிய வெனிசூலா அரசு தமது நாட்டு மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொலம்பியாவுக்கு வந்து வாங்கிச் செல்ல எல்லையைத் திறந்து விடுமாறு கோரிக்கை வைத்தது. இதை கொலம்பியா அரசும் ஏற்றது.

எல்லை திறப்பு
இதையடுத்து நேற்று குறிப்பிட்ட நேரத்திற்கு எல்லை திறக்கப்படும் என கொலம்பியா அறிவித்தது. இதையடுத்து வெனிசூலா நாட்டவர் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்து விட்டனர். திட்டமிட்டபடி எல்லை திறக்கப்பட்டதும், அத்தனை பேரும் திமுதிமுவென கொலம்பியாவுக்குள் நுழைந்தனர்.

அத்தியாவசியப் பொருட்கள்
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கடைகளில் தேவையான உணவுப் பொருட்கள், மருந்து, பால் பவுடர் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டு தமது நாட்டுக்குத் திரும்பினர்.

ஒரு வருடத்திற்குப் பிறகு
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு கொலம்பியா எல்லை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததால் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

பெரும் பொருளாதார வீழ்ச்சி
வெனிசூலா நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இத்தனைக்கும் இது எண்ணெய் வளம் மிக்க நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலை சரிவால் வந்த வினை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடியோடு குறைந்து போய் விட்டதால் வெனிசூலா கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது, பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து விட்டது.

கோபத்தில் மக்கள்
வெனிசூலா அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் இந்த நிலைக்குக் காரணம் என்று மக்கள் கடும் கோபத்துடனர். சாதாரண மருந்து, மாத்திரை கூட அங்கு கிடைப்பதில்லை என்பது மிகக் கொடுமையானது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications