உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவை அனுப்ப விளாடிமிர் புடின் தயார் - ரஷ்ய தூதரகம்
உயர்மட்ட குழுவை மின்ஸ்க் நகருக்கு அனுப்ப ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தயாராக உள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
மாஸ்கோ: உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு குழுவை அனுப்ப ரஷ்யா தயார், இந்த பேச்சுவார்த்தை பெலேராஸ் நாட்டு தலைநகர் மின்ஸ்க் இல் நகரில் நடக்க வேண்டும் என்று புடின் அறிவித்ததாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா இரண்டாவது நாளாக ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

இந்நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு குழுவை அனுப்ப ரஷ்யா தயார், இந்த பேச்சுவார்த்தை பெலேராஸ் நாட்டு தலைநகர் மின்ஸ்க் இல் நகரில் நடக்க வேண்டும் என்று புடின் அறிவித்ததாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் திடீர் தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றிலிருந்து ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கிறது. போர் என்று கூறும் அளவுக்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல்கள் இன்னும் தொடுக்கப்படவில்லை. உக்ரைனில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் உலக நாடுகள், இந்த விவகாரத்தை கவனமாக கையாண்டு வருகின்றன.
அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்டவைகளை உறுப்பு நாடாக கொண்டுள்ள நேட்டோ அமைப்புடன் உக்ரைன் சேர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
கீவின் மேல் வான் தாக்குதல் சைரன்கள் அலறியவண்ணம் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்திகள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி ரஷ்ய விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டு கட்டிடம் ஒன்றினுள் புகுந்ததாக கூறப்படுகிறது. தலைநகரின் சுற்றுப்புறப்பகுதியில் ரஷ்யப் படைகள் ஊடுருவியுள்ளன, அடுத்து தலைநகருக்குள்ளும் ஊடுருவும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பெரிய நகரங்களில் வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூடு சத்தமும் அலற சுமார் 1 லட்சம் பேர் வீடு வாசலை விட்டு வெளியேறி விட்டனர். செர்னோபில் அணு நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிட்டன.
அமெரிக்காவின் கைப்பாவையாக இருப்பதாக புதின் கருதும் உக்ரைனைக் கைப்பற்றி அரசாங்கத்தை கவிழ்ப்பதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமெரிக்க மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு குழுவை அனுப்ப ரஷ்யா தயார், இந்த பேச்சுவார்த்தை பெலேராஸ் நாட்டு தலைநகர் மின்ஸ்க் இல் நகரில் நடக்க வேண்டும் என்று புடின் அறிவித்ததாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications