இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து பெரும் சுனாமி.. 222 பேர் பலி.. 600 பேர் படுகாயம்!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சுனாமி ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் பெரிய சுனாமி அந்த தீவை தாக்கி உள்ளது.
இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் இந்த சுனாமி தாக்கி உள்ளது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சரியாக எங்கே
ஜாவா தீவிற்கும் சுமத்ராவிற்கும் இடையில் இந்த சுனாமி உருவாக்கி உள்ளது. இந்தோனேசியாவின் பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளை இந்த சுனாமி தாக்கி உள்ளது. இது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஆகும்.
|
என்ன காரணம்
ஜாவா தீவிற்கு அருகில் இருக்கும் கரகட்டாவ் எரிமலை வெடித்த காரணத்தால் இந்த சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. இந்த எரிமலை வெடித்த 10 நிமிடத்தில் சுனாமி ஏற்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட நில அடுக்கு நகர்வு காரணமாக சுனாமி உருவாகி இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
|
உள்ளே வந்தது
சுனாமியில் கடல் நீர் மொத்தமாக உள்ளே வந்துள்ளது. பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளை சேர்ந்த வீடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. 5000க்கும் அதிகமான வீடுகளுக்குள் நீர் புகுந்ததாக கூறப்படுகிறது.
|
மரணம் எத்தனை
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. இந்த சுனாமியில் 600 பேர் காயமடைந்துள்ளனர். 300க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications