சர்ப்ரைஸ் தாக்குதலுக்கு தயாராக இருங்கள்.. பதிலடி கொடுப்போம்.. பாக்.ராணுவ மேஜர் எச்சரிக்கை
இந்தியா நினைத்து பார்க்க முடியாத சர்ப்ரைஸ் தாக்குதல் ஒன்றை பாகிஸ்தான் நிகழ்த்த போகிறது என்று பாக்.ராணுவ மேஜர் ஆசிப் காஃபர் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
இஸ்லாமாபாத்: இந்தியா நினைத்து பார்க்க முடியாத சர்ப்ரைஸ் தாக்குதல் ஒன்றை பாகிஸ்தான் நிகழ்த்த போகிறது என்று பாக்.ராணுவ மேஜர் ஆசிப் காஃபர் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று மாலையில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் விமானப்படை தாக்குதலில் இருந்து இந்த தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த் நிலையில் பாக்.ராணுவ மேஜர் ஆசிப் காஃபர் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்ப்ரைஸ் தாக்குதல்
அவர் தனது பேட்டியில், சர்ப்ரைஸ் தாக்குதலுக்கு தயாராக இருங்கள். நீங்கள் அதிர்ச்சியடைய வேண்டிய நேரமிது. நாங்கள் செய்ய வேண்டியதை செய்ய போகிறோம். இந்தியா எதிர்பார்க்காத வித்தியாசமான பதிலடியை நாங்கள் கொடுக்க போகிறோம்.
முடிவு
நாங்கள் இது தொடர்பான தேவையான முடிவுகளை எடுத்துவிட்டோம். ராணுவத்தை தயார் நிலையில் இருக்க கூறி இருக்கிறோம். இந்திய எல்லையில் பதற்றம் நிலவி வருவது உண்மைதான். இந்திய ராணுவம் லாகூர் அருகே எல்லையில் தனது படைகளை குவித்து வருகிறது. அந்த பகுதியில் அதிக எண்ணிக்கையில் இந்திய ராணுவ வீரர்கள் குவிந்து வருகிறார்கள்.
ராணுவம் குவிப்பு
அதேபோல் பஹ்வால்பூர் அருகேயும் இந்திய ராணுவம் அதிக எண்ணிக்கையில் குவிந்து இருக்கிறது . அவர்கள் தாக்குதலுக்கு தயாராகி இருக்கிறார்கள். கிரான் கிராமத்திலும் இந்திய ராணுவம் தனது படைகளை குவித்து வருவது செயற்கைகோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாதான்
இந்தியா போருக்கான பாதையை தேர்வு செய்துவிட்டது. உங்களுக்கு எங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும். ஈர்த்து விட்டீர்கள். இனி நடப்பதை பாருங்கள். அப்பாவி மக்களை குறி வைப்பதே இந்தியாவின் நோக்கம். அவர்களை தாக்க முயன்று தீவிரவாதிகளை தாக்கிவிட்டதாக இந்தியா கூறுகிறது.
அப்படி இல்லை
இந்தியா போருக்கான பாதையை தேர்வு செய்துவிட்டது. உங்களுக்கு எங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும். ஈர்த்து விட்டீர்கள். இனி நடப்பதை பாருங்கள். அப்பாவி மக்களை குறி வைப்பதே இந்தியாவின் நோக்கம். அவர்களை தாக்க முயன்று தீவிரவாதிகளை தாக்கிவிட்டதாக இந்தியா கூறுகிறது.