துபாயில் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெற்ற வாக்கத்தான்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் நீரிழிவு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில் வாக்கத்தான் 6.12.2013 அன்று ஜபீல் பார்க்கில் நடைபெற்றது.

லேண்ட்மார்க் குரூப் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் கிரீன் குளோப் அமைப்பின் ஹுமைத் அபுபக்கர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் பங்கேற்று நீரிழிவு குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை எடுத்துச் சென்றனர்.

20,000க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மருத்துவர் தினமும் குறைந்த பட்சம் 20 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்யமுடன் இருக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications