For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

400 பேர் மரணம்.. 2000 பேர் படுகாயம்.. சிரியாவில் தொடரும் தாக்குதல்.. பூமியில் ஒரு நரகம்

சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 400 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சிரியாவில் தொடரும் தாக்குதல்... 5 நாட்களில் 400 பேர் மரணம்- வீடியோ

    டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 400 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால் உண்மையான எண்ணிக்கை என்ன என்ற கணக்கு இன்னும் வெளியாகவில்லை.

    தற்போது சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது.

    2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது இது இறுதிக்கட்டத்தை அடைந்து இருக்கிறது.

    ஒரே இடம்

    ஒரே இடம்

    தற்போது புரட்சி படையிடம் கவுட்டா என்று பகுதி மட்டுமே இருக்கிறது. இந்த பகுதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே இருக்கும் முக்கியமான இடம் ஆகும். இதை கைப்பற்றத்தான் தற்போது அரசு படை அங்கு வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.

    உதவி

    உதவி

    இந்த பிரச்சனை தீவிரம் ஆனது, இதில் ரஷ்யா கைகோர்த்த போதுதான். ரஷ்ய ராணுவம் சிரியா அரசுக்கு ஆதரவாக அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய வான்படை அங்கு மோசமான குண்டுகளை போட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

    அதிகம்

    அதிகம்

    முதல் நாள் முடிவில் மொத்தம் 85 பேர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது 5 நாள் முடிவில் 400 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று கணக்கு காட்டப்பட்டு இருக்கிறது. இதுவரை 2000 பேர் மோசமாக காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பலரின் உடல் மீட்கப்படவில்லை.

    பல நகரம்

    பல நகரம்

    அங்கு இருக்கும் 100க்கும் அதிகமான கிராமங்கள் மொத்தமாக அழிந்து போய் இருக்கிறது. 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அந்த பகுதியில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். 27,000 குழந்தை இதில் இருக்கலாம் என்று இப்போது வரை கணிக்கப்பட்டு இருக்கிறது.

    English summary
    War in Syria kills 400 people in just 5 days. The war is going on between Syria government army and Anti goverment forces. Syria army leads the with the help of Russia. Nearlu 4 lakh people trapped inside the Syrian enclave of eastern Ghouta.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X