ஏன் இந்த 'ஷட்டவுன்'.. அமெரிக்கர்கள் புரிந்து கொள்ள வேண்டும்... ஒபாமா பேச்சு
வாஷிங்டன்: ஏன் இந்த ஷட்டவுன்... ஒவ்வொரு அமெரிக்கரும், என்ன நடந்தது என்பதை புரி்ந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த மூடல் நடவடிக்கையால் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அமெரிக்க அரசு இயந்திர செயல்பாடும் முடங்கிப் போயுள்ளது.
தேசியப் பூங்காக்கள் மூடப்பட்டு விட்டன, அரசு துறைகள் செயல்படவில்லை. ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க போர் நினைவிடங்களும் கூட மூடப்பட்டு விட்டன. தேசிய நினைவுச் சின்ன அருங்காட்சியகமும் மூடப்பட்டுள்ளது.

வரலாறு காணாத பரபரப்பு
கடந்த 17 ஆண்டுகளில் நடந்துள்ள முதல் மூடல் நடவடிக்கை இது என்பதால் அமெரிக்க மக்கள் பெரும் பரபரப்படுன் காணப்படுகின்றனர். தலைநகர் வாஷிங்டனில் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

தொடர்கிறது இழுபறி
இந்த மூடல் நடவடிக்கை எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. அதுதொடர்பான அறிகுறியையும் காணோம். நாடு முழுவதும் ஒபாவின் அதிரடி நடவடிக்கை குறித்த பேச்சாகவே உள்ளது.

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றம்
அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஒபாமாவின் பணியாளர்களும் அனுப்பப்பட்டனர்
அதிபர் ஒபாமாவின் பணியாளர்களும் கூட குறைக்கப்பட்டு விட்டனர். மிகவும் சொற்பமான ஊழியர்கள் மட்டுமே அவருடன் உள்ளனர். மற்றவர்கள் அனுப்பப்பட்டு விட்டனர்.

ராணுவத்தில் ஆள் குறைப்பு இல்லை
அதேசமயம், ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படையில்ஆள் குறைப்புஎதுவும் இல்லை. அங்கு முழு அளவில் வீரர்கள், பணியாளர்கள் பணியில் தொடர்கின்றனர்.

சிவில் பணியாளர்கள் குறைப்பு
அதேசமயம், பென்டகன், தனது சிவில் பணியாளர்கள் 8 லட்சம் பேரில் பாதிப் பேரை கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

குடியரசுக் கட்சியினரே பொறுப்பு- ஒபாமா
இந்த நிலையில் இந்த ஷட் டவுன் நடவடிக்கை குறித்து ஒபாமா கூறுகையில், இந்த நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. ஆனால் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குடியரசுக் கட்சியினர் அரசுக்கு எதிராக கொள்கைப் போரில் ஈடுபட்டுள்ளனர். அவர்களே இன்றைய நிலைக்குக் காரணம். பல கோடி அமெரிக்கர்களுக்கு சுகாதாரத் திட்டம் போய்ச் சேருவதற்கு அவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
-
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications