ஆச்சரியம்.. ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.44 லட்சம்.. ஊரெல்லாம் இதே பேச்சு.. என்ன காரணம்..?
தங்கத்தினால் ஆன குடிநீர் பாட்டில் ரூ.44 லட்சமாம்
ரோம்: ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.44 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா?.. நம்பித்தான் ஆக வேண்டும்.. இந்த செய்திதான் இணையத்தில் வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது.
குடிக்கும் தண்ணீரை, விலை கொடுத்து வாங்குவோம் என்று உலக மக்கள் ஒருபோதும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்..
திண்ணைகளிலும், தெருக்களிலும், இலவச தண்ணீர் பந்தல்களை வைத்த தமிழகம் இது.. முன்பின் தெரியாதவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் தாக்கத்தை தீர்த்த பாரம்பரியம் நம்முடையது.

காஸ்ட்லி பாட்டில்
இன்று நிலைமையே தலைகீழாகிவிட்டது.. பாலைவிட தண்ணீரின் விலை அதிகமாகிவிட்டது.. இயற்கை வரமாக அளித்த தண்ணீருக்கு விலை வைத்து விற்க தொடங்கிவிட்டோம்... ஒரு பாட்டில் குடிநீர் 20 ரூபாய் முதல் 40 ரூ வரை விற்கப்படுகிறது.. இதுவே ஸ்டார் ஹோட்டலுக்குள் சென்றால், ஒரு பாட்டில் மினரல் வாட்டர் 60 ரூபாய் பில் போடுகிறார்கள்.

சுத்த தங்கம்
ஆனால், ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.44,95,830 லட்சத்திற்கு விற்கப்படுகிறதாம்.. இதுதான் உலகிலேயே விலைமதிக்க முடியாத குடிநீர் பாட்டில் ஆகும்.. இந்த தண்ணீர் பாட்டில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது... பாட்டில் சுமார் 750 மில்லி தண்ணீர் கொண்டது. ஆனால், அந்த தண்ணீர் பாட்டிலில் அப்படி என்ன ஸ்பெஷல்? மொத்தமும் சுத்த தங்கத்தால் ஆனது.

இரு துருவங்கள்
24 கேரட் தங்கத்தால் தயாரானது.. இதற்காகவே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது.. ஃபெர்னான்டோ அல்டமிரனோ என்பவர்தான் இந்த தங்க தண்ணீர் பாட்டிலை டிசைன் செய்துள்ளார்... இன்னொரு ஸ்பெஷலும் உள்ளது, உலகின் எதிர் துருவங்களில் இருக்கும் பிரான்ஸ், பிஜி நாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை இந்த பாட்டிலில் நிரப்பி உள்ளனர்.. இந்த தண்ணீரை குடித்தால், அதிக உத்வேகம் கிடைக்கும்.. அதிக சுவையாக இருக்கும் என்கிறார்கள்.. காஸ்ட்லி விலைக்கு இதுவும் ஒரு காரணமாம்.

ஜப்பான்
இதுபோலவே ஜப்பான் நாட்டில் கோனா நிகரி என்ற தண்ணீர் பாட்டில் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது... இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ஹவாய் தீவின் ஆழ்கடலில் சுமார் 2000 மீட்டர் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் இந்த தண்ணீர்.. இதை குடித்தால் உடலின் எடை குறையுமாம்.. புத்துணர்வு கிடைக்குமாம்.. அதனாலேயே 30 ஆயிரம் கொடுத்து அதை பலரும் வாங்கி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications