பசிக் கொடுமையால் சிங்கக் கறி சாப்பிடும் சிரியா மக்கள்
Subscribe to Oneindia Tamil
டமாஸ்கஸ்: உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா மக்கள் சிங்கத்தினை இறைச்சிக்காக வெட்டுவது போன்று வெளியாகியுள்ள புகைபடத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போரால், இதுவரை சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிழக்கு சவுதாவில் அல்குயாரியா அல் ஷாமா மிருக காட்சி சாலையில் இருந்த சிங்கத்தை கொன்று அதன் தலை மற்றும் உடலில் உள்ள இறைச்சியை 3 பேர் வெட்டுவது போன்ற புகைப்படம் வெளியானது.
இப்படம் மூலம், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப் பட்டுள்ள சிரியா மக்கள் இதுபோன்று பல மிருகங்களின் இறைச்சியை சாப்பிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications