இரட்டை கோபுர தாக்குதலில் எங்களுக்கு தொடர்பா? அதிர்ச்சி அளிக்கும் வழக்கில் சவுதி வாதம்!
இரட்டை கோபுர தாக்குதலில் உதவியதாக சவுதி நாட்டின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: 2001 செப்டம்பர் மாதம் 11ம் தேதி இரட்டை கோபுரம் அல்கொய்தா தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. அமெரிக்காவில் நடந்த மிக மோசமான தீவிரவாத தாக்குதல் ஆகும் இது.
ஆனால் அந்த தாக்குதல் நடந்ததில் இருந்து நிறைய கேள்விகளும், குழப்பங்களும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இது அமெரிக்காவே திட்டமிட்டு நடத்திய தாக்குதல் என்று அமெரிக்கர்களே எழுதினார்கள்.
சிலர் இதெல்லாம் அரசியல் திட்டம் என்றார்கள். அப்படித்தான் இந்த பிரச்சனையில் சவுதிக்கும் தொடர்பு இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

பண உதவி
இரட்டை கோபுர தாக்குதலுக்கு சவுதி உதவியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகளுக்கு சவுதி பண உதவி அளித்து இருக்கிறது. அங்கு இருக்கும் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த உதவி சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சட்டம்
இந்த குற்றச்சாட்டுகள் சரியாக ஒபாமா ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து அந்நிய நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்திற்கு 'ஜாஸ்டா' என்று பெயர் வைக்கப்பட்டது.

பிரச்சனை
தற்போது சவுதிக்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்பட இருக்கிறது. அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள், அமெரிக்க உளவுப்படை, ராணுவம் என அனைவரும் சவுதி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதன்படி தாராளமாக சவுதியை இந்த வழக்கின் கீழ் விசாரிக்க முடியும். இது இருநாட்டு பிரச்சனையாக மாறும்.

பதிலடி
தற்போது இதற்கு சவுதி தக்க பதிலடி கொடுத்து இருக்கிறது. நாங்கள்தான் உதவினோம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளனர். இதற்கு எதிராக சிறிய ஆதாரம் கூட கொடுக்கப்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். நீதிமன்றத்தில் பேசிய சவுதி தரப்பு அந்த சட்டத்தை தூக்கி எறியுங்கள் என்று கோபமாக பேசியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications